Monday, 15 February 2010
கிறுக்கியதில் கிழித்துப்போட்டது.!
பிறப்பு.!
இறப்பின் ஆரம்பம்.
இளமை.!
முதுமையை தொடும் வரை.
அழகு.!
முகச்சுருக்கம் விழும்வரை.
அம்மா.!
இவ்வுலகில் "அன்பு" இருக்கும் வரை.
அப்பா.!
நான் இவ்வுலகில் இருக்கும் வரை.
“மேலும் படிக்க”
நான்.!
என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் வரை.
கேள்வி.!
விடை கிடைக்கும் வரை.
காதல்.!
........... silint இதுவரைக்கும் எதுவும் தெரியல..
தெரிந்தால் இனிவரும் பதிவில் சொல்கிறேன்.
நட்பு.!
............ கற்பை போன்றதாம் so no commentes
நண்பி.!
காதலியாகாமல் இருக்கும் வரை.!
ஈழம்.!
அது தமிழ் தாயின் கனவு (கண்டிப்பாய் என்றோ ஒருநாள் நனவாகும்).
தமிழ்.!
அது என் சுவாசம்.
english (ஆங்கிலம்).!
ficker மாட்டும் வரைக்கும்.
வாள் ஏந்திய சிங்கமும்.!
சிரிக்கிறது தமிழனை பார்த்து.
தமிழர் கைகள்(உறவு) வலுவானால்
சிங்கம் கூட பயந்தோடும்.
பிரபாகரன்.!
அது எங்க குல சாமி.
அன்றைய கியுபாவிற்கு ஒரு சே குவேரா..
இன்றைய தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன்.
தோல்விகள் இல்லாமல்
வெற்றியின் சரித்திரம் எழுதப்படுவதில்லை.
Tuesday, 9 February 2010
ஆண் + பெண் = காதல்(ர்)தினம் February 14
இப்போதுள்ள காலத்தில் கடவுளைக் கூட கண்டுபிடித்துவிடலாம் காதலை கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது.. ஏன் என்றால் இப்போதுள்ள பெண்களிடம்( மன்னிக்கணும் பெண்களை மட்டும் உதரணத்துக்கு எடுத்து கொண்டதற்கு.. ஆண்களும் கூட உண்டு.) "வெயிட்டன பார்ட்டியா"னு பார்த்துத்தான் காதலே வருதாம். சரி விசயத்துக்கு வருவோம்
“மேலும் படிக்க”
காதல் என்றால் அன்பு. (நான் சொல்றது சரிதானே..!) அப்படி என்றால் காதலுக்கு விசேட நாள் தேவை தானா? february-14 "காதலர் தினம்" 'காதலிக்கும் கன்றாவிகளே '..வருடத்தின் 365 நாளும் அவனிடமோ! அவளிடமோ! காதலை(அன்பு) வெளிப்படுத்திரிங்க அப்படி என்றால் எதுக்கு உங்களுக்கு காதலர் தினம்.? ஒரு பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ உண்மையான அன்பாக இருந்தால் 365 நாளும் காதலர் தினமே...
நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கும் நபரா.. அப்படினால் பெண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்.
- நீங்கள் நல்லவரா? கெட்டவரா? அது முக்கியம் இல்லை. உங்களிடம் விலை உயர்ந்த கை பேசி (Cell phone)IPhone இருத்தல் வேண்டும்.
- உங்களுக்கு சொந்தமான வாகன (van,car, ect..)வசதி இருத்தல் வேண்டும்.
- வங்கி கணக்கு Fixed deposit, or current account, or saving accountஇருத்தல் வேண்டும் கண்டிப்பாக ATM card இருத்தல் வேண்டும் போனசாக Cradit card இருத்தல் நல்லது.
- விதம் விதமாய் her style, dress அலங்காரம் பன்னுபவராக இருத்தல் வேண்டும்.
- கையில் ஒரு தங்க மோதிரம், கழுத்தில் ஒரு வெள்ளி சங்கிலி இருத்தல் வேண்டும். (கவரிங்காக இருந்தாலும் பிரச்சனை இல்லை பார்ப்பதற்கு தங்கம், வெள்ளியாக ஜோளித்தல் வேண்டும்.)
- மேலே சொன்ன எதுவுமே இல்லையா கவலைய விடுங்க நீங்கள் எதாவது ஒரு மேலைத்தேய நாடொன்றில் இருந்தாலே போதும் நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அழகு,அறிவு இல்லாடியும் பிரச்சனை இல்லை. (இது மேலைத்தேய கலாச்சாரத்துக்கு ஆசைபடும் பெண்களுக்கு மட்டும்)
- கஞ்ச்சதனம் இருக்கவே இருக்ககூடாது.
நீங்கள் ஒரு ஆண் மகனை காதலிக்கும் நபரா அப்படினால் ஆண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்.
- அதிகம் குண்டாகவும் இல்லாமல் அதிகம் மெலிந்த தேகமும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
- கண்டிப்பாக உங்களுக்கு "தங்கை" இருத்தல் வேண்டும்
- Modern girl இருத்தல் வேண்டும் (ஒரு சில ஆண்களுக்கு மட்டும்)
- அப்பா நல்ல வசதி வாய்ப்புகளோடு இருத்தல் வேண்டும்.
- மேலே சொன்ன எதுவுமே இல்லையா அப்படியானால் கவலையை விடுங்க அழகும், அறிவும் நிறைந்த குடும்ப விளக்காக இருந்தாலே போதும்.
குறிப்பு: இது சும்மா டைம் பாஸ்க்கு எழுதியது
Tuesday, 2 February 2010
இப்படியும் நடக்குதுங்கோ இங்க..
தி கிரேட் மலேசியா. ஆசியா நாடுளில் வளர்ந்துவரும் நாடுகளில் மிக முக்கியம் வாய்ந்த நாடு. அப்படி இருக்கையில் நாட்டின் முதுகெலும்பே இளைஞர்கள்தான். அதில் எந்தமாற்றமும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது ஒரு சில ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள். சிலர் இப்படியும் நடந்து கொள்கிறார்கள் அண்மையில் இங்கு நடந்த ஒரு உண்மைச்சம்பவம். இதைப் படிக்கும் உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞகளை நினைக்கையில் உங்களுக்கு என்ன தோன்னுது....... நாட்டில் இளைஞர்களை கூலிப்படைகளாக பயன் படுத்தி கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதால் பெண்கள் தனியாக நடந்து செல்லவே பயப்படுகிறார்கள். சில வழிப்பறி சம்பவங்களால் மரணச் சம்பவங்களும் நடந்தது உண்டு.
“மேலும் படிக்க”
பெண்கள் கழுத்தில் சங்கிலியோ, தலிக்கொடியோ அணிந்து கொண்டு நடமாட முடிவதில்லை. நாள் தோறும் எதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கிறது அண்மையில் வேலை முடிந்து வீடு செல்ல விருப்பிய ஒரு குடும்ப பெண். தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை தனது கைப்பையில் பத்திரபடுத்திக் கொண்டு அதற்கு பதிலாக ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொண்டு சென்றார்.
சாலையில் அப் பெண்மணி செல்லும் பொது மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்களில் பின்னல் இருந்த ஒருவன் மஞ்சள் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்றான். சிறிது துராம் சென்ற பிறகு அந்த மஞ்சள் கயிற்றை பார்த்த அவன் மீண்டும் அந்த பெண்மணியிடமே திரும்பி வந்தான். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அப்பெண்ணுக்கு அந்த மஞ்சள் கயிற்றை கட்டி இனிமேல் உனக்கு நான் தாண்டி புருஷன் என்றானாம்.
அந்த மஞ்சள் கயிற்றில் மஞ்சள் துண்டுதான் இருந்தது. பெண்கள் அணியும் மஞ்சள் கயிற்றில் தங்கம் அணிந்திருப்பார்கள். அப்படி எதிர்பார்த்த அந்த வழிப்பறி திருடனுக்கு ஒன்றும் அகபடாததால் ஆத்திரத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிச் சென்றான்.
தனியாக செல்லும் பெண்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். இப்படியும் சில வழிப்பறி திருடர்கள் நடமாடுகிறார்கள்.
Wednesday, 20 January 2010
விலைமாதர் கண்ணீர்
எல்லா சாதியம் தீண்டுகிற எச்சில் சாதி எங்கள் சாதி.!
எல்லா மதமும் கலக்கின்ற எங்கள் மதம் மன்மதம்.!
இனிப்பு கடை நாங்கள் எல்லோருக்கும் திண்பண்டம்.!
குனிந்து வருகிற நீதிபதி, குற்றவாளியும் அடுத்தபடி.!
“மேலும் படிக்க”
தனயன் நுழைய முன்வாசல்
தந்தை நழுவ பின்வாசல்.!
மூடாதிருக்கும் எப்போதுமே எங்கள் வாசல்.!
நித்தம் ஒரு கணவன் குறைவில்லை
நிரந்தர கணவன் வரவில்லை
புதுமணப் பெண்போல தினம் தோறும்
பொய்க்கு இளமை அலங்காரம்.!
தத்துவஞானிகள் மத்தியிலே தசையவதானம் புரிகிறோம்
உத்தமப்புத்திரர் பல பேருக்கு ஒருநாள் பத்தினி ஆகிறோம்.!
மேடையில் பெண்கள் விடுதலை பேசியபின் வந்து
மேதையும் எங்களை தொட்டனைப்பான்
நாங்கள் ஆடைகள் கட்ட நேரமின்றி ஆண்களை மாற்றிக்கட்டுகிறோம்.!
உப்பு விலைதான் எங்கள் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்தநிலை.!
தப்புத்தான் விடமுடியவில்லை
தருமம் சோறு போடவில்லையே...!
உலகத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள் ஆனால் இவர்களின் மற்றம்??? எப்பொழுது ஒரு மனிதன் அன்புக்கு அடிமைப்படாமல் காமத்துக்கு அடிமைப்பட்டால் இது தொடர் கதைதான். இதை பார்த்துகொண்டு இருக்கும் இந்த நிமிடம் முதல் உலகத்தில் எங்கயோ ஒரு முலையில் இந்த சமூகத்தாலும், காம அரக்கர்களாலும் ஒரு விலைமாது உருவாகிக்கொண்டுதான் இருக்கிறாள். இந்த உலகத்தில் இதை மாற்று வதற்கும் வழியுண்டு அந்த முன்று எழுத்துக்களால் மட்டுமே இதை மாற்ற முடியும். "அன்பு"
ஒவ்வொரு உயிர் மேலயும் அன்பு செலுத்துவோம்.
உங்கள் கருத்துக்கள் எதிர்பார்கிறேன்..
உங்கள் கருத்துக்கள் தான் மலர் வளர்வதுக்கான உட்டச்சத்து.
நன்றி :கவிதைகள் தென்றல் வாரந்திர பத்திரிகை
Friday, 15 January 2010
என் பதிவுக்கு.! எனது விளக்கம்.!

“மேலும் படிக்க”
உலக மக்கள் தொகையில் ௦0.99 விழுக்காடு நம் தமிழ் மொழி பேசும் மக்கள். 66.06 மில்லியன் மக்கள் பேசும் மொழி இந்த உலகுக்கு நாகரிகத்தை சொல்லிகொடுத்த மொழி. பல வரலாற்றையும் பல சரித்திரங்களையும் கொண்ட மொழி. இப்படி இருக்கும் ஒரு தேசிய இனம். இப்பொழுது அடிமைப்பட்டுகிடப்பது ஏன்.! நீங்கள் சித்தித்தது உண்டா? உங்கள் இதயத்தில் கை வைத்து சொல்லுங்கள் ஒவ்வொருவரும் எங்கயோ எதுக்கோ அடிமைப்பட்டுத்தான் இருகிறிர்கள்.! சிலபேர் பதவிகளுக்கும், பலபேர் மேலைத்தேய கலாச்சாரத்துக்கும். அடுத்து உலகத்திலே ஒற்றுமை இல்லா இனம் என்று மார்தட்டிச் சொல்லுங்கள்.. ஏன்.. ஏன்.. இப்படி..! ஒரு விநாடி சிந்தித்தது உண்டா? இப்பொழுது நம் இனத்தின் அடையாளம் என்ன? இப்படி இருந்தோமானால் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான் அடிவாங்குபவன் ??????????????? இப்படி இருந்தால் நிச்சயமா எத்தனை பெரியார் வந்தாலும் சரி எத்தனை பிரபாகரன் சரி உங்களை ம்ம்.. ம்ம்.. ம்ம்..
Wednesday, 13 January 2010
அவசரமானதும்..! அவசியமானதும்..!
தமிழர்களின் திரு நாளாம் தைப்பொங்கல். அப்படியா..! திங்கிறதுக்கு எதாவது கிடைக்குமா? இப்போதுள்ள தமிழன் இப்படிதான் கேட்டு அலையுறான். இலங்கையிலோ மஹிந்த சிந்தனையில அன்னதானம் போட்டுறான் சந்தோசபடுங்க அதில முதல் பந்தியில நம்ம தமிழன்தான் இருக்கானாம். தமிழ்நாட்டு தமிழனோ புரியாணிக்காக அலையுறான். வெளிநாடுகளில் உள்ள தமிழனோ எங்க ஓசில சாப்பாடு போறான்கள். சாப்பாடு சாமான்கள் குடுக்கிறான் என்று அலையுறான். ஐயோ கடவுளே நெஞ்சு பொறுக்கலையே..!
“மேலும் படிக்க”
^
^
^
^
சரி விசயத்துக்கு வருவம் தமிழர் திருநாள்,தமிழர் புது வருடப்பிறப்பு இது உங்க கலாச்சாராம்,பண்பாடு, மறக்கலாமா? நீங்கள் எந்த மதத்திலையும் இருங்க நான் அதைப்பற்றி சொல்லவரவில்லை. பொங்கல்,வருடப்பிறப்பு மதம் சார்பானது அல்ல இனம் சார்பானது. ஆகவே தமிழர் திரு நாளை எல்லோரும் இணைந்து மற்ற இனங்களுக்கிடையே நல்ல நட்புறவு கொண்டு சிறப்பாக கொண்டாடுவோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். கடந்த ஆண்டு தமிழர்களுக்கு கசப்பான ஆண்டாக அமைந்தது . வரும் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய ஆண்டவனை வேண்டிகொள்வோம். உலகில் உள்ள எல்லா தமிழனுக்கும் வருட பிறப்பு,தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
நான் மேலே எழுதியவை....
தொப்பி அளவாக இருந்தால் யார் வேணுன்னாலும் போட்டுங்குங்க
யார் மனதும் காயப்படும் படியாக இருந்தால் மன்னிக்கவும். உங்கள் கருத்துகள் எதிபர்க்கடுகின்றன..
Sunday, 3 January 2010
காதலிப்பவர்களுக்கு மற்றும் காதலிக்க போகிறவர்களுக்கு மட்டும்.
இந்தவருடத்தின் முதல் பதிவை காதலர்களுக்காக பதிவதில் மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் பிரியமானவரிடம் உங்கள் காதலை எந்த மொழியில் தெரியப்படுத்தப் போறீங்க 100 மொழிகளில் "நான் உன்னை காதலிக்கிறேன்" என்ற வார்த்தையை எப்படி சொல்கிறார்கள் கிழே பாருங்க
+++காதலியிடம் திட்டு வாங்கியோர் சங்கம்+++
- English - I love you
- Afrikaans - Ek het jou lief
- Albanian - Te dua
- Arabic - Ana behibak (to male)
- Arabic - Ana behibek (to female)
- Armenian - Yes kez sirumem
- Bambara - M'bi fe
- Bengali - Ami tomake bhalobashi (pronounced: Amee toe-ma-kee bhalo-bashee)
- Belarusian - Ya tabe kahayu
- Bisaya - Nahigugma ako kanimo
- Bulgarian - Obicham te
- Cambodian - Soro lahn nhee ah
- Catalan - T'estimo
- Cherokee - Tsi ge yu i
- Cheyenne - Ne mohotatse
- Chichewa - Ndimakukonda
- Chinese
- Cantonese - Ngo oiy ney a
- Mandarin - Wo ai ni
- Comanche - U kamakutu nu
- (pronounced oo----ka-ma-koo-too-----nu) -- Thx Tony
- Corsican - Ti tengu caru (to male)
- Cree - Kisakihitin
- Creol - Mi aime jou
- Croatian - Volim te
- Czech - Miluji te
- Danish - Jeg Elsker Dig
- Dutch - Ik hou van jou
- Elvish - Amin mela lle (from The Lord of The Rings, by J.R.R. Tolkien)
- Esperanto - Mi amas vin
- Estonian - Ma armastan sind
- Ethiopian - Afgreki'
- Faroese - Eg elski teg
- Farsi - Doset daram
- Filipino - Mahal kita
- Finnish - Mina rakastan sinua
- French - Je t'aime, Je t'adore
- Frisian - Ik hald fan dy
- Gaelic - Ta gra agam ort
- Georgian - Mikvarhar
- German - Ich liebe dich
- Greek - S'agapo
- Gujarati - Hoo thunay prem karoo choo
- Hiligaynon - Palangga ko ikaw
- Hawaiian - Aloha Au Ia`oe
- Hebrew
- To female - "ani ohev otach" (said by male) "ohevet Otach" (said by female)
- To male - "ani ohev otcha" (said by male) "Ohevet ot'cha" (said by female)
- Hiligaynon - Guina higugma ko ikaw
- Hindi - Hum Tumhe Pyar Karte hae
- Hmong - Kuv hlub koj
- Hopi - Nu' umi unangwa'ta
- Hungarian - Szeretlek
- Icelandic - Eg elska tig
- Ilonggo - Palangga ko ikaw
- Indonesian - Saya cinta padamu
- Inuit - Negligevapse
- Irish - Taim i' ngra leat
- Italian - Ti amo
- Japanese - Aishiteru or Anata ga daisuki desu
- Kannada - Naanu ninna preetisuttene
- Kapampangan - Kaluguran daka
- Kiswahili - Nakupenda
- Konkani - Tu magel moga cho
- Korean - Sarang Heyo or Nanun tangshinul sarang hamnida
- Latin - Te amo
- Latvian - Es tevi miilu
- Lebanese - Bahibak
- Lithuanian - Tave myliu
- Luxembourgeois - Ech hun dech gaer
- Macedonian - Te Sakam
- Malay - Saya cintakan mu / Aku cinta padamu
- Malayalam - Njan Ninne Premikunnu
- Maltese - Inhobbok
- Marathi - Me tula prem karto
- Mohawk - Kanbhik
- Moroccan - Ana moajaba bik
- Nahuatl - Ni mits neki
- Navaho - Ayor anosh'ni
- Ndebele - Niyakutanda
- Norwegian
- Bokmaal - Jeg elsker deg
- Nyonrsk - Eg elskar deg
- Pandacan - Syota na kita!!
- Pangasinan - Inaru Taka
- Papiamento - Mi ta stimabo
- Persian - Doo-set daaram
- Pig Latin - Iay ovlay ouyay
- Polish - Kocham Ciebie
- Portuguese - Eu te amo
- Romanian - Te iubesc
- Russian - Ya tebya liubliu
- Scot Gaelic - Tha gra\dh agam ort
- Serbian - Volim te
- Setswana - Ke a go rata
- Sign Language - ,\,,/ (represents position of fingers when signing 'I Love You')
- Sindhi - Maa tokhe pyar kendo ahyan
- Sioux - Techihhila
- Slovak - Lu`bim ta
- Slovenian - Ljubim te
- Spanish - Te quiero / Te amo
- Swahili - Ninapenda wewe
- Swedish - Jag alskar dig
- Swiss-German - Ich lieb Di
- Surinam - Mi lobi joe
- Tagalog - Mahal kita
- Taiwanese - Wa ga ei li
- Tahitian - Ua Here Vau Ia Oe
- Tamil - Nan unnai kathalikaraen
- Telugu - Nenu ninnu premistunnanu
- Thai
- To female - Phom rak khun
- To male - Chan rak khun
- Informal - Rak te
- Tunisian - Ha eh bak
- Turkish - Seni Seviyorum
- Ukrainian - Ya tebe kahayu
- Urdu - mai aap say pyaar karta hoo
- Vietnamese
- To female - Anh ye^u em
- To male - Em ye^u anh
- Welsh - 'Rwy'n dy garu di
- Yiddish - Ikh hob dikh
- Yoruba - Mo ni fe
- Zazi - Ezhele hezdege
- Zuni - Tom ho' ichema
பின்குறிப்பு :-
இதைப் பார்த்து காதலியிடமோ அல்லது ......?????....
அடி விழுந்தாலோ அல்லது உதை விழுந்தாலோ, செருப்பால் அடித்தலோ அதற்கு மலர் பொறுப்பல்ல.
Thursday, 31 December 2009
புத்தாண்டு வாழ்த்துக்கள்-2010

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத ஆண்டாக சென்ற 2009 இருந்தது. ஒவ்வொரு தமிழனும் உங்கள் அத்தியாயத்தில் குறித்துக்கொள்ளும் ஆண்டாக சென்ற ஆண்டு இருந்தது. இதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது। சில எட்டப்பனால் வந்த வினை. நமக்கு இழப்புக்கள் புதியவை அல்ல எங்கள் தியாக தீபங்களின் கனவை நனவாக்க வரும் ஆண்டிலேயே உறுதி கொள்வோமாக
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
Wednesday, 23 December 2009
மலேசியா விமானப்படைக்கு சொந்தமான விமான இயந்திரத்தை காணவில்லை..!

ஆசியா நாடுகளிலே மிக வேகமாக வளர்ந்துவரும் நாடு மலேசியா. 2020௦ என்ற தொலைநோக்கு பார்வையோடு வளர்ந்து வரும் நாடு. அதிநவீன கடற்படை, விமானப்படை, தரைப்படை உள்ள நாடு. இப்படி இருக்கும் பொழுது RM5 கோடி (மலேசியா நாணய மதிப்பில்) பெறுமானமுள்ள இயந்திரத்தை காணவில்லை என்றால்.. அந்த நாடுடைய ராணுவ கட்டமைப்பு நிலை?? இதனிடையே இவ்விகாரம் தொடர்பாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறு இருப்பினும் விசாரணையை துரிதப்படுத்தி இதற்கு தீர்வு காண்பதே நாடுக்கும் நாடு மக்களுக்கும் நல்லது.
Saturday, 12 December 2009
2010ற்கான நோபல் விருது மஹிந்தவிற்கா??

இந்தவருட நோபல் விருது அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு வழங்கப்பட்டுள்ளது இது சரிதானா? உலகத்தில அமைதியை உண்டுபன்னுவம் உண்டுபன்னுவம் என்று சொல்லியே உலக அமைதியை கெடுப்பதும் அமெரிக்கதானே? தானும் நல்லா இருக்ககூடாது மற்றவனும் நல்ல இருக்ககூடாது இதுதானே அமெரிக்கவின் வெளிவுரவுக் கொள்கை. அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் விருது வாங்கியது தவறு என்று சொல்லவரவில்லை. அதிபர் ஒபாமா நோபல் விருது வாங்குவதற்கு இன்னும் நேரகாலம் இருக்கு. இந்த விருது அறிவிக்கும் பொழுதே 3000 துருப்புக்கள் தலிபான்களுடன் சண்டை போடுவதற்கு சென்றுள்ளனர். இப்படி இருக்கும் பொழுது அதிபர் ஒபாமா நோபல் விருது வழங்கியது சரிதானா? நோபல் விருது தேர்வு குழு என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் விருதுக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் சாதாரண வாசகன் என்றவிதத்தில் என் கேள்வி இது? இப்படி இருந்தால் அடுத்தவருடம் உலக சமாதானத்துக்கு பாடுபட்டவர் என்ற பெயரில் மஹிந்தவிற்கோ அல்லது சரத் பொன்சேகவிற்கோ வழங்கப்பட்டாலும் ஆச்சரிய படுறதுக்கு ஒன்றும் இல்லை.
Monday, 30 November 2009
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை (தமிழீழம்) மறக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா?
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை மாறலாமா?
இப்பாடல்
பாதை மாறும் தமிழனுக்கு சமர்ப்பணம்.
Sunday, 15 November 2009
உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் இவர்களுக்கு சொல்ல போகிற பதில் என்ன?
கார்த்திகை 27. தமிழர்களின் புனித நாள். தமிழர்களை உலக அரங்கில் தலை நிமிரவைத்த கதாநாயகர்கள். தமிழர்களுக்கு ஒளியை தந்துவிட்டு இவர்கள் ஒளியை அனைத்துகொண்டவர்கள். இவர்களின் கேள்விகளுக்கு உங்கள் மனசாட்சியில் இருந்து என்ன பதில் சொல்லபோறிங்க? இவர்களுக்கு உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் பதில் சொல்லணும். தமிழர்களே.. இவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்கள் உங்கள் ஒவ்வொரு மனதிலும். போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா? இவர்கள் இட்ட தீ என்றும் எம் மனதில் எரிமலையாக.. உங்கள் நினைவுகளோடு விரைவில் எங்கள் விடுதலையை வென்றெடுப்போம்.
இந்த நேரத்தில எங்கயோ பார்த்த கவிதைதான் ஞாபகத்திற்கு வருது
மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனன்
அனைவரும் கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?
"புன்னகை" கவிதை இதழில் இருந்து
Saturday, 24 October 2009
மலேசியாவில் ஈழ அகதிகளின் நிலை...

மலேசியாவில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுள்ள இலங்கை அகதிகள் 98 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வரவேற்கத்தக்கவை இருந்தாலும் அகதிகள் அடையாள அட்டை வைத்திருந்தும் கைதுசெய்வது தவறே.. இங்குள்ள அகதிகளுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் கடமை. கல்வி, மருத்துவம் போன்றவை மறுக்கபடுகின்றன இங்கு உள்ள குழந்தைகளின் எதிர்காலம் ?? கிட்டதட்ட 4000 பேர் அகதிகளாக ஐக்கிய நாடுகள் சபையில் பதிவுசெய்துள்ளனர். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கபடுவதலே இதற்கு மாற்று வழியாக உயிரை பணயம் வைத்து கடல் கடந்து செல்கிறார்கள்.

நாட்டிலும் வாழமுடியாமல் வந்த இடத்திலும் நிம்மதியாக வாழமுடியாமல் ரெண்டும் கேட்ட நிலைமை. இவர்களின் நிலைமைகளை மாற்ற போகிறவர்கள் யார்? உலக நாடுகளோ புத்தரின் கொள்கையிலே இருக்கிறது. (கண்களைமுடி தியானத்தில்...) இங்குள்ள ஒருசிலர் உதவி என்ற பேரில் RM40க்கு௦ அத்தியாவசிய பொருட்களை கொடுத்துவிட்டு RM400க்கு௦௦ விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் இவர்களுக்கு தேவை அத்தியாவசிய பொருட்கள் இல்லை அகதிகளுக்கான அடிப்படை உரிமையே..! நீங்கள் நாடோடிகளை பார்த்ததுண்டா? இல்லையென்றால் மலேசியாவில் உள்ள அகதிகளை வந்து பாருங்கள் இவர்களின் நிலைமையும் இதுவே.. இவர்களின் எதிர்காலம் இப்படியே போய்விடுமா? கடவுளும் காலமும் தான் பதில் சொல்லும்.
கதறல்களும் கருத்துகளும் தொடரும்...
மேலும்.. மேலும்.. எழுதுவதற்கு.. உங்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் தேவை.
நன்றி
இவர்களில் ஒருவன்.
Tuesday, 8 September 2009
மலேசியாவில் 116௦ இலங்கையர்கள் கைது?
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்லவிருந்த 116௦ இலங்கைத் தமிழர்கள் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாக அறியப்படுகிறது இவர்கள் அனைவரும் மலேசியாவில் உள்ள 'ஐக்கிய நாடுகள் சபையில் (united nations high commissioner for rafugees) அகதிகளாக பதிவு செய்துள்ளனர். இவ்வளவு தொகையான பேர் கைதுசெய்யப்பட்டது இதுவே முதல் முறையாக அறியப்படுகிறது. 'ஐக்கிய நாடுகள் சபை'(UNHCR) அகதிகள் மேல் கட்டும் அக்கறை இன்மையே இவர்கள் உயிரை பணயம் வைத்து செல்வதாக அறியப்படுகிறது இனி 'ஐக்கிய நாடுகள் சபை' என்ன செய்ய போகிறது... பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
செய்தி:
மலேசியாவில் இருந்து ஈழத்தமிழன்.
Friday, 24 July 2009
நாம் தொடர்ந்து பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் மலரும்.
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர் என்று கூறியுள்ளார் அருட் தந்தை ஜெகத் கஸ்பார்.
நக்கீரன் குழுமத்தின் இனிய உதயம் காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் பிரபாகரனை 2002ம் ஆண்டு சந்தித்தது குறித்து அவர் விளக்கியுள்ளார்.
பேட்டியில் ஜெகத் கஸ்பார் கூறியிருப்பதாவது:
என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில் மகத்தான ஒரு விடுதலைப் போராட்டம் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம் தான்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கட்டி எழுப்ப முடிந்தது என்றால், அதற்கு பிரபாகரன் என்ற மாபெரும் ஆளுமைதான் காரணம்.
தண்ணீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பில், மிக மிகச் சிறிய ஒரு இனத்தில் இருந்து, அண்டை நாடான இந்தியா எப்படியும் புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க-
உலகத்தில் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல், மரபுவழி ராணுவம் என்று நாம் சொல்கிற தரைப்படை, பீரங்கிப்படை, கடற்படை செறிந்த ஒரு புலனாய்வுப் பிரிவு, அனைத்துலக அளவிலான ஒரு கொள்வனவுப் பிரிவு, தேர்ந்த உளவுப்பிரிவு, இவற்றை எல்லாம் தாங்கி நடத்துவதற்காக ஒரு நிதிவள ஏற்பாடு, இன்னும் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு ஒரு நிர்வாகத்தைக் கொடுக்கிற மேலாண்மைப் பிரிவு என இத்தனையையும் கட்டி எழுப்பிய மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அபூர்வ ஆற்றல்கள் அமையப்பெற்ற ஒரு மனிதனால் மட்டுமே இது சாத்தியமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களுக்கு போர்க்குணம் இருந்தது என்று புறநானூற்றுக் காலத்தை நாம் சொன்னாலும், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் நாம் போர்க்குணம் மிக்க மக்களாக இருந்தோம் என்பதற்கு நம்மால் எந்தவித ஆதாரங்களையும் சொல்ல முடியவில்லை.
பெரிய அளவில் தொழில் முனைதல் இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட, எதையும் விதியே விதியே என்று ஏற்றுக் கொள்கிற ஒரு மக்கள் இனத்தின் மனவெளிகளுக்குள் புகுந்து புரட்சி செய்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கின்ற தலைமுறையையே உருவாக்கிக் காட்டிய மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது.
பிரபாகரன் ஒரு அதீத பிறவி...
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.
தமிழ் இனம் பிரபாகரனால் தாழ்ந்ததா, உயர்ந்ததா என்று கேட்டால், உயர்ந்தது என்று உறுதியாகச் சொல்லுவேன். பிரபாகரனின் ஆளுமைக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சூழமைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தின.
முதலில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் காலம் அப்படியே நீடித்திருக்குமானால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்கும். ரஷ்ய வல்லரசு உடைந்து போனதால் பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஈழப் போராட்டம் வளர்ச்சி கண்டிருந்தது. பனிப்போர் முடிந்தபிறகு உலகம் ஒற்றைத் திசையில் பயணப்பட தொடங்கியது. நமக்கான ஆதரவு சக்திகள் இல்லாமல் போனார்கள்.
ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப் படை, 15 ஆயிரம் அப்பாவித் தமிழர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலை எனும் துயர நிகழ்வு. ஆனால் 15 ஆயிரம் மக்களைச் சாகடித்த பழியும் குற்றமும் யாராலும் பேசப்படவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை மட்டும்தான் பேசப்பட்டது.
அதற்காக நான் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தவில்லை. அது நடந்திருக்கக் கூடாது. ராஜீவ் மரணத்திற்காக அழுதவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் அந்தவொரு நிகழ்வை வைத்துக்கொண்டு பழி வாங்கித் தீர்க்க வேண்டும் என்ற பழி உணர்ச்சியை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறது, வருகிறது.
இதையும் சந்தித்தபடி புலிகள் ஓர் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக முன்னேறி வெற்றிகளைக் குவித்து வந்த நேரத்தில்தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதம் என்பது ஓர் எதிர் அரசியலாக மாறுகிறது. இதன் எதிர்விளைவுகளை எல்லாம் புலிகள் இயக்கமும் சந்திக்க வேண்டிய கட்டாயம்.
உலக அளவில் புலிகளின் கட்டமைப்புக்கள், நிதிவளங்கள் எல்லாம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி, பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக முடங்கிப்போய் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்கள்.
களத்தில் அவர்கள் பெரும் வெற்றியைக் குவித்தாலும்கூட, விடுதலையை முன்நகர்த்திச் செல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனையிறவு வரைக்கும் வென்று ஏறக்குறைய தமிழ் ஈழத்தை சாதித்துவிட்ட நிலையில்தான்-
ஒருவகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வரப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது இயக்கத்துக்குள் பிளவை உண்டாக்கி, உளவு அமைப்புக்கள் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தினார்கள்.
இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால் புலிகள் சமாதானம் பேசிய காலகட்டத்தில்தான் அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடுகள் மத்தியில் சித்தரித்துக் காட்டிய ஈன ராஜதந்திரத்தை சிங்கள அரசு கையாண்டது.
பிராந்திய அளவில், உலக அளவில் பகைவர்களாக இருக்கிற நாடுகள் எல்லாம் இந்த விஷயத்தில் சேர்ந்து நின்றார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நின்று சிறிலங்காவுக்கு கைகொடுத்தார்கள் என்பதைவிட, அள்ளிக் கொடுத்தார்கள் என்பது சரியாக இருக்கும்.
அதேபோல இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உதவினார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உதவினார்கள். ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உதவின. அவ்வளவு ஏன்- உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உதவி, தமிழ் இனத்தின் விடுதலை உணர்ச்சியைத் தகர்த்து எறிந்திருக்கிறார்கள்.
இத்தனை சக்திகளை மீறியும் புலிகள் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான வரலாறு. அதனை நீங்கள் மறுக்கவே முடியாது.
புலிகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அவற்றை எல்லாம் மீறி அவர்கள் தார்மீகப் போராட்ட நேர்மை கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்.
50,000 சிங்களர்களைக் கொன்று குவித்திருக்க முடியும்...
கடைசிக் கட்டப் போரில் அவர்கள் நினைத்திருந்தால் கொழும்பு நகரில் 50 ஆயிரம் பேரையாவது கொன்று குவித்திருக்க முடியும். அந்த அளவுக்கு ரசாயன ஆயுதங்களை அவர்கள் நிச்சயமாக வைத்திருந்தார்கள். ஆனால் செய்யவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் பார்த்தோமேயானால் சிங்களப் பேரினவாதம் எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்தார்கள், புலிகள் எத்தனை சிங்களவர்களைக் கொலை செய்தார்கள் என்று கணக்கெடுத்தால், புலிகள் உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாகப் போராடியிருக்கிறார்கள். கடந்த பத்து மாதத்தில் மட்டும் சிங்களப் பேரினவாதம் 60 ஆயிரம் பேரைக் கொன்று அழித்திருக்கிறது.
புலிகள் 600 பேரைக்கூட கொலை செய்யவில்லை. குறிப்பாக அப்பாவி மக்களைக் கொலை செய்யவே இல்லை. கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியபோது பயணிகளில் ஒரு உயிர் கூட போய்விடக் கூடாது என்று கவனத்தோடு தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய நாளன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் வானூர்தி தரை இறங்கியிருக்கிறது. பயணிகள் அனைவரும் வெளியே வந்தபிறகே தாக்குதலை தொடங்கினார்கள்.
புலிகள் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் 1:30 நிமிடத்துக்கே தாக்குதல் தொடங்கி இருப்பார்கள் என்றால், சிறிலங்கா வான்படையை அன்றே நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள்.
ஆனால் என்ன செய்வது? ஊடக பலம் இல்லை. உலகத்தில் எல்லோரும் அவர்களை அழித்துவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள்.
சந்திரிகா அம்மையார் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய பொருளாதாரத் தடையை அங்கு விதித்திருந்தார். கடுகைக் கூட தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டார். அப்படி இருந்தும் புலிகள் தம் மக்களைப் பட்டினிச் சாவில் விட்டுவிடவில்லை.
விவசாயத்தைத் திட்டமிட்டு அவர்கள் நடத்தினார்கள். ஏழு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும், எவ்வளவு தேங்காய் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு விவசாயத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.
இவை எல்லாம் உலகத்துக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. எல்லா இயக்கங்களையும் போல இவர்களும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லா தவறுகளையும் மீறி ஒரு மகத்தான மக்கள் இயக்கமாக இருந்திருக்கிறார்கள்.
மாபெரும் மனிதர் பிரபாகரன்...
2002 ஆம் ஆண்டில் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக்கொண்டார். சின்ன போராளிகள் கூட அவருக்கு வணக்கம் சொல்லவில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள், அவ்வளவுதான்.
தனக்கு தாகம் எடுத்தபோதுகூட தானே போய் தண்ணீர் எடுத்து அருந்தினார். ஒரு தன்முனைப்பு இல்லாத மனிதர். எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாக, பிசிறில்லாமல் அவரால் பதில் சொல்ல முடிந்தது. மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர்.
இந்தியாவின் கையில் ரத்தப் பழி...
இந்தியாவின் கை இரத்தப் பழியை சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக் கொள்ள முடியாது.
கடைசிக்கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப்பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பொஸ்பரஸ் குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் 80 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என்றார்.
ஆனால் போர் முடிந்தபிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா?
அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டால்கூட பரவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.
அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த 10 ஆயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே 18 ஆம் நாள் சண்டையில் மட்டும் 20 ஆயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் தெரியாதவை அல்ல.
லண்டனில் இருந்து வெளிவருகின்ற டைம்ஸ்', 'கார்டியன்' பத்திரிகைகள், பாரிசில் இருந்து வெளிவருகிற லெமோண்ட் போன்ற உலக அளவில் மதிக்கப்படும் பத்திரிகைகள் இவற்றை எல்லாம் பதிவு செய்திருக்கின்றன.
இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்காவை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியில் இருந்து சிறிலங்காவின் பின்நின்ற பாவத்தில் இருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியாது. வரலாற்றின்- மனச்சாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழைய சலித்துப் போன உண்மையைத்தான் நானும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உலகம் முழுவதும் தமிழர்கள் ஒரு கருத்தில் பிளவுபடாமல் இணைந்து நின்றார்கள் என்றால், உலகம் நமது கோரிக்கையைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்- இது ஒன்று.
கொரில்லாப் போர் வரும்...
நாம் இனி இரண்டு திசைகளில் பயணப்படவேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்குத் துணையாக அரசியல் பின்னால் நின்றது. இப்போது அரசியல் போராட்டம் முதன்மை பெறும். ஆயுதப் போராட்டம் முடியவில்லை. அது கட்டாயம் தொடர்ந்து நடக்கும். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு கெரில்லாப் போர் மையம் கொள்ளும்.
இந்தப் போரினால் பாதிக்கப்படாத உங்களுக்கும் எனக்குமே இவ்வளவு வேகம் இருக்கும் என்றால், நேரடியான பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு எத்தனை கோபம் இருக்கும். எனவே கெரில்லாப் போர் நிச்சயம் நடக்கும். ஆனால் அதனைவிட மேலாக உலக அளவில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும்.
தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் என்பது, அனைத்து இந்திய மக்களுக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்வது, ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் ஈழம் பற்றி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.
முல்லைத்தீவில் நடந்த அந்த உச்சபட்சக் கொடுமைதான் தமிழீழத்துக்கான தார்மீக நியாயப்பாடாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. தொடர்ந்து நாம் பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் வரும் என்பது எனது நம்பிக்கை என்றார் ஜெகத் கஸ்பார்.
+++நன்றி+++
www.தட்ஸ்தமிழ்.com
Thursday, 18 June 2009
நாம் தமிழராய் பிறந்ததுதான் குற்றமா?

நாங்களும் மனிதர்கள் தானே




இவர்களின் எதிர்காலம்.........?





நான் தமிழச்சியாக பிறந்ததுதான் தவறா?


ஐயோ கடவுளே.! என் இந்த குழந்தையை இங்கே பிறக்கவைத்தாய்?
Thursday, 11 June 2009
Wednesday, 20 May 2009
இதையும் கொஞ்சம் பாருங்களேன்...
இவர் தான் அந்த உடம்புக்குரிய ஆள்
நன்றி: கலகம்.
Tuesday, 14 April 2009
தோல்வி..!
சிற்பி !
பல வரலாறுகள் இந்த
சிற்பி செதுக்கியது தான் !
தோல்வி ஒரு
நெருப்பு !
நிறைய தீபங்களை இந்த
நெருப்புதான் ஏற்றியது !
தோல்வி ஒரு
அணை !
ஏராளமான நதிகள் இந்த
அணையிலிருந்து கிளம்பின….
தோல்வி என்பது
முடிவல்ல…
இடைவெளி !
தோல்வி ஒரு
அவஸ்தை அல்ல
அவகாசம் !
தோல்வி என்பது
தண்டணை அல்ல !
எச்சரிக்கை !
அன்பால் இணைந்தவர்கள்
இப்ப மணி என்ன..
தமிழில் எழுதுவதற்கு...
என்னை பற்றி நான் சொல்லனுமா?
- மலர்
- என்னைப்பற்றி.. சொல்வதற்கு ஒன்றும் இல்ல My heart know it's own sorrow. எனது துக்கத்தை எனது இதயம்தான் அறியும். ரூம் போட்டு ஜோசிச்சு பார்த்தேன் "நான் யார்? என்னைப்பற்றி என்ன சொல்ல இதற்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை எனக்குள்ளே என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் தேடல் தொடர்கிறது... பல தேடல்களோடு.. இப் பிரபஞத்தில்.. தன்னைத்தானே புகழ்கிறவன் முட்டாள்.





































