சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர் என்று கூறியுள்ளார் அருட் தந்தை ஜெகத் கஸ்பார்.
நக்கீரன் குழுமத்தின் இனிய உதயம் காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் பிரபாகரனை 2002ம் ஆண்டு சந்தித்தது குறித்து அவர் விளக்கியுள்ளார்.
பேட்டியில் ஜெகத் கஸ்பார் கூறியிருப்பதாவது:
என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில் மகத்தான ஒரு விடுதலைப் போராட்டம் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம் தான்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கட்டி எழுப்ப முடிந்தது என்றால், அதற்கு பிரபாகரன் என்ற மாபெரும் ஆளுமைதான் காரணம்.
தண்ணீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பில், மிக மிகச் சிறிய ஒரு இனத்தில் இருந்து, அண்டை நாடான இந்தியா எப்படியும் புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க-
உலகத்தில் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல், மரபுவழி ராணுவம் என்று நாம் சொல்கிற தரைப்படை, பீரங்கிப்படை, கடற்படை செறிந்த ஒரு புலனாய்வுப் பிரிவு, அனைத்துலக அளவிலான ஒரு கொள்வனவுப் பிரிவு, தேர்ந்த உளவுப்பிரிவு, இவற்றை எல்லாம் தாங்கி நடத்துவதற்காக ஒரு நிதிவள ஏற்பாடு, இன்னும் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு ஒரு நிர்வாகத்தைக் கொடுக்கிற மேலாண்மைப் பிரிவு என இத்தனையையும் கட்டி எழுப்பிய மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அபூர்வ ஆற்றல்கள் அமையப்பெற்ற ஒரு மனிதனால் மட்டுமே இது சாத்தியமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களுக்கு போர்க்குணம் இருந்தது என்று புறநானூற்றுக் காலத்தை நாம் சொன்னாலும், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் நாம் போர்க்குணம் மிக்க மக்களாக இருந்தோம் என்பதற்கு நம்மால் எந்தவித ஆதாரங்களையும் சொல்ல முடியவில்லை.
பெரிய அளவில் தொழில் முனைதல் இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட, எதையும் விதியே விதியே என்று ஏற்றுக் கொள்கிற ஒரு மக்கள் இனத்தின் மனவெளிகளுக்குள் புகுந்து புரட்சி செய்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கின்ற தலைமுறையையே உருவாக்கிக் காட்டிய மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது.
பிரபாகரன் ஒரு அதீத பிறவி...
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.
தமிழ் இனம் பிரபாகரனால் தாழ்ந்ததா, உயர்ந்ததா என்று கேட்டால், உயர்ந்தது என்று உறுதியாகச் சொல்லுவேன். பிரபாகரனின் ஆளுமைக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சூழமைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தின.
முதலில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் காலம் அப்படியே நீடித்திருக்குமானால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்கும். ரஷ்ய வல்லரசு உடைந்து போனதால் பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஈழப் போராட்டம் வளர்ச்சி கண்டிருந்தது. பனிப்போர் முடிந்தபிறகு உலகம் ஒற்றைத் திசையில் பயணப்பட தொடங்கியது. நமக்கான ஆதரவு சக்திகள் இல்லாமல் போனார்கள்.
ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப் படை, 15 ஆயிரம் அப்பாவித் தமிழர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலை எனும் துயர நிகழ்வு. ஆனால் 15 ஆயிரம் மக்களைச் சாகடித்த பழியும் குற்றமும் யாராலும் பேசப்படவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை மட்டும்தான் பேசப்பட்டது.
அதற்காக நான் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தவில்லை. அது நடந்திருக்கக் கூடாது. ராஜீவ் மரணத்திற்காக அழுதவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் அந்தவொரு நிகழ்வை வைத்துக்கொண்டு பழி வாங்கித் தீர்க்க வேண்டும் என்ற பழி உணர்ச்சியை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறது, வருகிறது.
இதையும் சந்தித்தபடி புலிகள் ஓர் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக முன்னேறி வெற்றிகளைக் குவித்து வந்த நேரத்தில்தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதம் என்பது ஓர் எதிர் அரசியலாக மாறுகிறது. இதன் எதிர்விளைவுகளை எல்லாம் புலிகள் இயக்கமும் சந்திக்க வேண்டிய கட்டாயம்.
உலக அளவில் புலிகளின் கட்டமைப்புக்கள், நிதிவளங்கள் எல்லாம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி, பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக முடங்கிப்போய் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்கள்.
களத்தில் அவர்கள் பெரும் வெற்றியைக் குவித்தாலும்கூட, விடுதலையை முன்நகர்த்திச் செல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனையிறவு வரைக்கும் வென்று ஏறக்குறைய தமிழ் ஈழத்தை சாதித்துவிட்ட நிலையில்தான்-
ஒருவகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வரப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது இயக்கத்துக்குள் பிளவை உண்டாக்கி, உளவு அமைப்புக்கள் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தினார்கள்.
இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால் புலிகள் சமாதானம் பேசிய காலகட்டத்தில்தான் அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடுகள் மத்தியில் சித்தரித்துக் காட்டிய ஈன ராஜதந்திரத்தை சிங்கள அரசு கையாண்டது.
பிராந்திய அளவில், உலக அளவில் பகைவர்களாக இருக்கிற நாடுகள் எல்லாம் இந்த விஷயத்தில் சேர்ந்து நின்றார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நின்று சிறிலங்காவுக்கு கைகொடுத்தார்கள் என்பதைவிட, அள்ளிக் கொடுத்தார்கள் என்பது சரியாக இருக்கும்.
அதேபோல இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உதவினார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உதவினார்கள். ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உதவின. அவ்வளவு ஏன்- உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உதவி, தமிழ் இனத்தின் விடுதலை உணர்ச்சியைத் தகர்த்து எறிந்திருக்கிறார்கள்.
இத்தனை சக்திகளை மீறியும் புலிகள் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான வரலாறு. அதனை நீங்கள் மறுக்கவே முடியாது.
புலிகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அவற்றை எல்லாம் மீறி அவர்கள் தார்மீகப் போராட்ட நேர்மை கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்.
50,000 சிங்களர்களைக் கொன்று குவித்திருக்க முடியும்...
கடைசிக் கட்டப் போரில் அவர்கள் நினைத்திருந்தால் கொழும்பு நகரில் 50 ஆயிரம் பேரையாவது கொன்று குவித்திருக்க முடியும். அந்த அளவுக்கு ரசாயன ஆயுதங்களை அவர்கள் நிச்சயமாக வைத்திருந்தார்கள். ஆனால் செய்யவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் பார்த்தோமேயானால் சிங்களப் பேரினவாதம் எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்தார்கள், புலிகள் எத்தனை சிங்களவர்களைக் கொலை செய்தார்கள் என்று கணக்கெடுத்தால், புலிகள் உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாகப் போராடியிருக்கிறார்கள். கடந்த பத்து மாதத்தில் மட்டும் சிங்களப் பேரினவாதம் 60 ஆயிரம் பேரைக் கொன்று அழித்திருக்கிறது.
புலிகள் 600 பேரைக்கூட கொலை செய்யவில்லை. குறிப்பாக அப்பாவி மக்களைக் கொலை செய்யவே இல்லை. கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியபோது பயணிகளில் ஒரு உயிர் கூட போய்விடக் கூடாது என்று கவனத்தோடு தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய நாளன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் வானூர்தி தரை இறங்கியிருக்கிறது. பயணிகள் அனைவரும் வெளியே வந்தபிறகே தாக்குதலை தொடங்கினார்கள்.
புலிகள் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் 1:30 நிமிடத்துக்கே தாக்குதல் தொடங்கி இருப்பார்கள் என்றால், சிறிலங்கா வான்படையை அன்றே நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள்.
ஆனால் என்ன செய்வது? ஊடக பலம் இல்லை. உலகத்தில் எல்லோரும் அவர்களை அழித்துவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள்.
சந்திரிகா அம்மையார் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய பொருளாதாரத் தடையை அங்கு விதித்திருந்தார். கடுகைக் கூட தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டார். அப்படி இருந்தும் புலிகள் தம் மக்களைப் பட்டினிச் சாவில் விட்டுவிடவில்லை.
விவசாயத்தைத் திட்டமிட்டு அவர்கள் நடத்தினார்கள். ஏழு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும், எவ்வளவு தேங்காய் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு விவசாயத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.
இவை எல்லாம் உலகத்துக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. எல்லா இயக்கங்களையும் போல இவர்களும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லா தவறுகளையும் மீறி ஒரு மகத்தான மக்கள் இயக்கமாக இருந்திருக்கிறார்கள்.
மாபெரும் மனிதர் பிரபாகரன்...
2002 ஆம் ஆண்டில் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக்கொண்டார். சின்ன போராளிகள் கூட அவருக்கு வணக்கம் சொல்லவில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள், அவ்வளவுதான்.
தனக்கு தாகம் எடுத்தபோதுகூட தானே போய் தண்ணீர் எடுத்து அருந்தினார். ஒரு தன்முனைப்பு இல்லாத மனிதர். எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாக, பிசிறில்லாமல் அவரால் பதில் சொல்ல முடிந்தது. மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர்.
இந்தியாவின் கையில் ரத்தப் பழி...
இந்தியாவின் கை இரத்தப் பழியை சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக் கொள்ள முடியாது.
கடைசிக்கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப்பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பொஸ்பரஸ் குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் 80 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என்றார்.
ஆனால் போர் முடிந்தபிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா?
அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டால்கூட பரவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.
அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த 10 ஆயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே 18 ஆம் நாள் சண்டையில் மட்டும் 20 ஆயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் தெரியாதவை அல்ல.
லண்டனில் இருந்து வெளிவருகின்ற டைம்ஸ்', 'கார்டியன்' பத்திரிகைகள், பாரிசில் இருந்து வெளிவருகிற லெமோண்ட் போன்ற உலக அளவில் மதிக்கப்படும் பத்திரிகைகள் இவற்றை எல்லாம் பதிவு செய்திருக்கின்றன.
இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்காவை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியில் இருந்து சிறிலங்காவின் பின்நின்ற பாவத்தில் இருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியாது. வரலாற்றின்- மனச்சாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழைய சலித்துப் போன உண்மையைத்தான் நானும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உலகம் முழுவதும் தமிழர்கள் ஒரு கருத்தில் பிளவுபடாமல் இணைந்து நின்றார்கள் என்றால், உலகம் நமது கோரிக்கையைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்- இது ஒன்று.
கொரில்லாப் போர் வரும்...
நாம் இனி இரண்டு திசைகளில் பயணப்படவேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்குத் துணையாக அரசியல் பின்னால் நின்றது. இப்போது அரசியல் போராட்டம் முதன்மை பெறும். ஆயுதப் போராட்டம் முடியவில்லை. அது கட்டாயம் தொடர்ந்து நடக்கும். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு கெரில்லாப் போர் மையம் கொள்ளும்.
இந்தப் போரினால் பாதிக்கப்படாத உங்களுக்கும் எனக்குமே இவ்வளவு வேகம் இருக்கும் என்றால், நேரடியான பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு எத்தனை கோபம் இருக்கும். எனவே கெரில்லாப் போர் நிச்சயம் நடக்கும். ஆனால் அதனைவிட மேலாக உலக அளவில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும்.
தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் என்பது, அனைத்து இந்திய மக்களுக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்வது, ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் ஈழம் பற்றி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.
முல்லைத்தீவில் நடந்த அந்த உச்சபட்சக் கொடுமைதான் தமிழீழத்துக்கான தார்மீக நியாயப்பாடாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. தொடர்ந்து நாம் பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் வரும் என்பது எனது நம்பிக்கை என்றார் ஜெகத் கஸ்பார்.
+++நன்றி+++
www.தட்ஸ்தமிழ்.com
skip to main |
skip to sidebar

நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலா அளவுக்கு மாநிறம். பயங்கர அழகியென்று சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான்.பார்த்ததுமே பச்சக்கென்று ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது.
கண்களில் நீர், என்னவளை கண்டுக் கொண்டதால் வந்த ஆனந்தக் கண்ணீரா? இல்லை கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான்! என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன்.
நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா? முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள்? காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.
கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்த என் காலம் அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது.
அவள் தான் என் காதலி என்று முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை தேடுவது?பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால் பக்கம் செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மஞ்சள் மைனா மாட்டுவாளா என்று என் கண்கள் ஏங்குகிறது.
அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் என்று நினைக்கிறேன். பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடுகிறது.
அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் வருகிறது.முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன்.
இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு, வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி..
அய்யோ கடவுளே!
எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?
உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?

ஐயோ இசை ஜாம்பவான்களே.. எங்கியாய்ய போய்விட்டிர்கள்..? அண்மையில் விஜயண்டோனி இசை அமைத்த பாடல் கேட்டநேர்தது ஒருமலை நேரம் பண்பலையை (fm redio) கேட்ட பாடல் என்ன கொடும சார். "ஆதீசுடி" படலை ரீமிக்ஸ் என்ற போர்வையில் நம்ம தமிழரின் மனத்தை கப்பலேற வைத்திருக்கிறார் விஜயண்டோனி இந்தமாதிரி பாடல்களை தடை செய்வேண்டும். இதை கண்டிக்கமாட்டர்களா? நாம் இசை ஜாம்பவான்களே..

"ஈழத்தமிழரின் எட்டப்பன்" எட்டப்பன் ௬ட்டம் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை

இந்த மனித ஜென்மம் கடவுளையும். ஆயுதம் எந்த வைத்துவிட்டான்.

நான் ரெம்ப பிஸி ஆதனால இப்படி ஒரு ஐடியா.! எப்படி என்ன ஐடியா.?

குடிகார பயலுகளா..! எப்படி சொன்னாலும் திருந்தமாட்டிங்க. இதையும் பாருங்க..

அழகு என்பது காண்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றொரு ஆங்கில சொல் உள்ளது. என் கண்களுக்கு அழகாகத் தெரிவது உங்கள் கண்ணுக்கு அப்படி தெரிய வேண்டிய அவசியமில்லை. எனக்கும் உங்களுக்கும் அழகாகத் தெரிவது அடுத்தவருக்கு அப்படி தோன்றுவது நிச்சயம் இல்லை ஒல்லியான உடல்வாக்கு, பருத்த உடல்வாக்கு, சிவந்த நிறம் பழுத்த நிறம் கருப்பு நிறம் உருண்டை முகம் தட்டை முகம் இதுபோன்று அநேக விஷயங்களில் அழகு குறித்து அளவீடுகள் ஆளாளுக்கு அவரவர் பார்வையில் மாறுபடுவது இயற்கை. இந்த நியதியை நிராகரித்து உலகம் முழுசுக்கும் அழகின் இலக்கணம் இவைதான் என்று இறுதி நியாயத்தை வரையருப்பவையே உலக அழகி போட்டிகள். அழகிப் போட்டிகளின் பின்னுள்ள, அரசியல், இவற்றின் சமூக, உளவியல் தாக்கங்கள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன்.
பிரபல பேச்சாளரும், நடிகருமான பெரியார்தாசன், கடந்த 20 ஆண்டுகளாக மனோதத்துவ சிகிச்சையாளராகவும், மனோதத்துவ ஆலோசகராகவும், பதிவு பெட்டு பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது இனி பெரியார்தாசன்...
அழகை ஆராதனை சேர்வது என்ன்ற விஷயம் மனிதகுலத்தில் காலங்காலமாக இருந்து வருவது தான். எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காக உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக பல செயல்கள் நடைபெறுவது தொன்றுதொட்டு நிலவும் வழக்கம் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கவர்வதற்காக தனிப்பட்டு நடைபெற்றுவந்த இம்மாதிரி காரியங்கள் நாளடைவில் மற்றவர்களையும் சந்தோசப்படுத்தும் விதமாக கலைவடிவம் பெற்றது. ஆதிவாசிகளின் நாட்டியம் தெருக்கூத்து, மேடை நாடகம் போன்ற வடிவங்களில் அழகு பரிமாற்றப்பட்டது.
இந்தக் கலை வடிவம் சினிமாவாகப் பரிணாமம் பெற்று பெருவாரியான மக்கள் கூட்டத்தைக் கவரத் தொடங்கிய பின்னர் இந்த "அழகுப் பரிமாற்றம்" என்பது பணக்காரர்களின் விளையாட்டாக மாறியது. அதாவது இதில் வணிகம் புகுந்து கொண்டது.

தெருக்கூத்தில் மகாராஜாவாக வேஷம் போடுபவர் அதிலே தன் திறமையைக் காட்டிவிட்டு பின்னர் துண்டேந்தி ஊர் வசூல் செய்து பிழைப்பு நடத்துவார். தானம் கொடுக்கிற மக்கள் வசதியாக வாழ்ந்தார்கள். சினிமாவில் இது உல்டாவானது! அங்கே ரசிகர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நடிகர் - நடிகைகள் வசதியில் கொழிக்கிறார்கள். ரசிகர்களோ வறுமையில் வாடுகிறார்கள். இந்த சினிமா தந்திரத்தை கவீகரித்க் கொண்ட பெரும் செல்வந்தர்கள் அழகிப் போட்டி என்ற ஐடியாவைக் கொண்டுவந்தார்கள். இந்த அழகிகள் வாயிலாக தங்கள் பொருட்களை விற்பனை செய்வது சுலபம் என்று கண்டு கொண்டார்கள்.
கடந்த 50,60 ஆண்டுகளாக இந்த உலக அழகி, பிரபஞ்ச அழகி கூத்தெல்லாம் நடைபெற்று வந்தாலும் கடந்த சுமார் 15 ஆண்டுகளில்தான் இந்தியப் பெண்களுக்கு இவற்றில் முதலிடமோ அல்லது இரண்டாம் இடமோ, முன்றாம் இடமோ கிடைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது அதாவது உலக மயமாக்கலுக்கு பிறகு ஆசியா கண்டத்தின் மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நாடாகிய இந்தியாவின் வணிகச் சந்தையை குறிவைத்து நடத்தும் நாடகம் இது.
உலக அழகி, பிரபஞ்ச அழகியவும் பட்டம் வென்ற இந்திய பெண்களைவைத்து விளம்பரம் செய்து தமது பொருட்களை இந்தியர்களின் தலையில் கட்டிவிடும் பன்னாட்டு நிறுவனங்களின் வியபர யுக்தி இதன் பின்னணியில் செயல்படுகிறது
சமூகத்தில் பெண்கள் மீதான இதன் தாக்கமும் கவனிப்பும் உரியது. இன்னன அளவுகளில்தான் அழகு என்ற அழகிப்போட்டி கருத்தாக்கத்தை நம்பும் பெண்கள் சிலர். தாங்களும் அதே அளவுகளைப் பெற விரும்பி உடல் இளைக்கும் பொருட்டு குறைவாக சாப்பிட்டும் பட்டினி கிடந்தும் உடல் நலத்தை கெடுத்து கொள்கிறார்கள்.
இதை விட மோசமானது உளவியல் தாக்கம். 32 28 32 என்னமோ அளவு சொல்கிறார்களே.. அந்த அளவி தனக்கு இல்லை என்பதாலும் அழககிப் போட்டிகளில் முன்னிறுத்தப்படும் சிவந்த நிறம் தனக்கு இல்லை என்பதாலும் தாழ்வுமனப்பான்மையில் புளுங்குகிற பெண்கள் எத்தனையோ பே
ர் இருக்கிறார்கள் மனச்சிதைவு நோய்க்கு (schizo phrenia) ஆளாகும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் ஏன் தான் அழகில்லை என்றுநினைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்களையும்
நானறிவேன். நம் மக்களுக்கு விழிப்புணர்வு வந்தாலொழிய இதற்கெல்லாம் விடிவில்லை" என்று பொரிந்து தள்ளினர் பெரியார்தாசன். இதுதான் அழகு என இலக்கணம் வகுக்க இவர்கள் யார்? கேக்குறவன் கேனையனா இருந்த ஐமமாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம். என்பது இதுதானோ.!!

போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் பா.மதியழகன்.
சுமார் மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நடைபெறுகின்ற போர், அனைத்துலக சக்திகளின் விளையாட்டு அரங்காக சிறிலங்காவையே மாற்றி விட்டது போன்ற செய்திகள் வெளிவருவது பலருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால், இன்னொரு நாட்டில் சிறிலங்காவை பந்தாகப் பாவிப்பார்கள் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்?
நிச்சயமாக, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ (RAW) வை தவிர பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஓகஸ்ட் 14, 2006 இல் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட் மீது கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலின் இலக்காக தூதுவரே இருந்தாலும் அவர் நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.
இந்தத் தாக்குதலில், சிறிலங்கா அதிரடிப்படையினர் நால்வர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்திருந்தனர்.
வழக்கம் போலவே, புலிகளே தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் என சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியது.
ஆனால், சிறிது காலத்திற்குப் பின்னர் சிறிலங்காவின் ஊடகவியலாளர் குழுவொன்று பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்து.
இந்த பயணத்தின் ஓர் அங்கமாக, சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட்டையும் ஊடகவியலாளர்கள் சந்தித்திருந்தனர்.
இன்னொரு வகையில் கூறப்போனால், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தது.
ஏனெனில், கொழும்பில் பாகிஸ்தானிய தூதுவர் மீதான தாக்குதலின் பின்னணியில் றோவே இருந்தது என்பதற்கான போதிய ஆதாரங்களை ஐ.எஸ்.ஐ திரட்டியிருந்தது.
அதன் அடிப்படையிலேயே, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தன்மீதான தாக்குதலுக்கு றோவே பின்னணியிலில் இருந்தது என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்த பசீர் வலி முகமட், விடுதலைப் புலிக
ளுக்கும் தன் மீதான தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என வெளிப்படையாகத் தெரிவித்து, விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருந்தார்.
பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்குமான நெருக்கமான உறவின் உயிர்நாடியாக பசீர் வலி முகமட் விளங்கினார்.
இலங்கையில் பாகிஸ்தான் ஆழமாக காலூன்றுவது தனது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் எனக் கருதிய இந்தியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நடவடிக்கைகளின் ஆணிவேராகத் திகழ்ந்த பசீர் வலி முகமட்டை கொழும்பில் வைத்து தீர்த்துக்கட்ட முனைந்து தோல்வியடைந்தது.
இருப்பினும், தனது புலனாய்வுப் பணியை தொடர்ச்சியாக முனைப்படுத்தியது.
இலங்கையை பொறியாக வைத்து, பாகிஸ்தானை நெருக்கடிக்குள் தள்ளுவதன் ஊடாக பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவில் விரிசலை ஏற்படுத்தி, தனது கொல்லைப்புறத்தில் தனக்கு எதிரான சக்திகள் காலுன்றுவதை நிறுத்த முடியும் என 'றோ' திடமாக நம்புகிறது.
புடவை வியாபரிகள் போல வேடம் தரித்து, மட்டக்களப்பில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் உளவுத் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த றோவின் இரு முகவர்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை 'றோ' சிறிலங்காவில் இறுக்கமாக்கியிருந்தது.
இருந்தபோதும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவுகள் வலுப்பட்டனவே தவிர, வலிமை இழக்கவில்லை. இது றோவுக்கு கடும் எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.
அதேவேளையில், ஐ.எஸ்.ஐயின் பின்னுதவியுடன் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட லஸ்கார் - ஈ - தைபா என்ற தீவிரவாத அமைப்பு மும்பாய் மீது மேற்கொண்ட தாக்குதல் றோவுக்கு தலைகுனிவை மட்டுமல்ல, தடுமாற்றத்தையும் உண்டு பண்ணியிருந்தது.
குறிப்பாக, பெருமளவான அமெரிக்க, ஐரோப்பா சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டமை, அனைத்துலக ரீதியில் இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டு பண்ணியிருந்தது.
அதற்கு இராணுவ ரீதியில் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா திட்டமிட்டது. ஆனால், கொண்டலீசா றைசின் தலையீடு அதற்கு இடமளிக்கவில்லை.
ஆனால், தனக்கு ஏற்பட்ட தலைக்குனிவுக்கு எதிராக பழிவாங்குவதற்கு 'றோ' துடியாய் துடித்து தருணம் பார்த்திருந்தது.
இதேவேளை, சிறிலங்காவுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் தானே வழங்குவதனூடாக பாகிஸ்தானின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கலாம் என செயற்பட்ட புதுடில்லிக்கு கடந்த பெப்ரவரி 27 ஆம் நாள் தொடங்கிய வெளிநாட்டு அமைச்சர்களின் 31 ஆவது சார்க் மாநாட்டில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுகள் மென்மேலும் வலுப்படத்தக்க வகையில் இணங்கப்பட்ட உடன்பாடுகள் கடும் விசனத்தையும், சினத்தையும் உண்டு பண்ணியிருந்தது.
அதன் காரணமாகவே, தமிழ்மக்களை கொன்றொழிப்பதற்கு முதுகெலும்பாக இருந்து வந்த காங்கிரஸ் விற்பன்னர்கள் திடீரென தமிழ்மக்கள் மீது அக்கறை உள்ளது போல் வெளிக்காட்ட முற்பட்டார்கள்.
கடந்த ஜனவரி 28 ஆம் நாள் மகிந்த ராஜபக்சவுடனாக சந்திப்பைத் தொடர்ந்து இராணுவ வெற்றிகள் அரசியல் தீர்வுக்கு வழிகோலுவதோடு, வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலை தோன்றுவதற்கு அடிப்படையாகும் என்ற சாரப்பட கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சரியாக ஒரு மாதம் கழிந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி, புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் கருத்து என்பது, சிறிலங்கா தொடர்பான காய்நகர்த்தலில் 'றோ' மீண்டும் ஒருதடவை தோற்றுப் போனது என்ற கருத்தின் மறுவடிவம் எனக் கொள்ளலாம்.
இதுவும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய வகையில், லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது தாக்குதலை நடத்துவதற்கு 'றோ' திட்டமிட்டமைக்கான பிரதான காரணம்.
அத்துடன், தம்புள்ளையில் நடைபெற்ற போட்டிகளின் போது, இந்திய துடுப்பாட்ட அணி; சிங்கள காடையர்களின் கல்லெறிக்கு தொடர்ச்சியாக இருமுறை உட்பட்டது.
இது, தனது நாட்டு அணியினருக்கு சிறிலங்கா உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்ற மனோபாவத்தை புதுடில்லி அதிகார வர்க்கத்தினருக்கு உண்டு பண்ணியிருந்ததாக அறிய முடிகிறது.
அது மட்டுமன்றி, இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததற்கு பதிலாகவே, சிறிலங்கா அணி குறித்த ஆட்டங்களில் பங்குபற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது.
இவையும், றோவின் தரவு சேகரிப்பு கோவைகளில் துணைக்காரணிகளாக அடையாளமிடப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு பெருமளவில் உள்ளது.
இவை அனைத்தையும் தாண்டிய உச்சக் காரணியாக, அனைத்துலக மட்டத்தில் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக வெளிப்படுத்துவதற்கு, உலகளாவிய ரீதியல் அனுதாபத்தை ஈட்டக்கூடிய ஒரு தாக்குதல் அவசியம் என திட்டமிட்ட 'றோ', அதற்கான மிகச்சிறந்த இலக்காக சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தெரிவு செய்தது.
இதன் ஊடாக ஒரே கல்லில் இரு மாங்காயை உடைத்துள்ளது.
அதேவேளை, இந்தப் பழியையும் புலிகள் மீது போடக்கூடிய கைங்கரியங்களில் 'றோ' ஈடுபடத் தொடங்கிவிட்டது.
ஆனால், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பிணைப்பை விரும்பாத எதிரிகளே லாகூர் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
அவதானங்களை கோர்வையாக்குகின்ற வாசகர்களுக்கு லாகூர் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது தெளிவாக புரிந்திருக்கும்.
நன்றி
புதினம்.காம்
நண்பர்களே.!
வலைப்பூவை பார்த்தபின்பு உங்கள் உள்ளத்து உணர்வை பதிவு செயுங்கள்
+++நன்றி+++
Friday, 24 July 2009
நாம் தொடர்ந்து பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் மலரும்.
Thursday, 18 June 2009
நாம் தமிழராய் பிறந்ததுதான் குற்றமா?
ஏய் சர்வதேசமே..! ஏன் புத்தரைப்போல் கண்களைமுடி தியானத்தில் இருக்கிறாய். கண்ணை திறந்து பார். பாதையில் செல்லும் பார்வை இழந்தவராய் நிக்கிறோம்... நாங்கள் செய்த தவறுதான் என்ன? எங்கள் உரிமைகளை நாங்கள் பெற்று பாட்டன் முப்பாட்டன் நிலத்தில் சுகந்திரமாக வாழ நினைத்தது தவறா?

நாங்களும் மனிதர்கள் தானே




இவர்களின் எதிர்காலம்.........?





நான் தமிழச்சியாக பிறந்ததுதான் தவறா?


ஐயோ கடவுளே.! என் இந்த குழந்தையை இங்கே பிறக்கவைத்தாய்?

நாங்களும் மனிதர்கள் தானே




இவர்களின் எதிர்காலம்.........?





நான் தமிழச்சியாக பிறந்ததுதான் தவறா?


ஐயோ கடவுளே.! என் இந்த குழந்தையை இங்கே பிறக்கவைத்தாய்?
Thursday, 11 June 2009
Wednesday, 20 May 2009
இதையும் கொஞ்சம் பாருங்களேன்...
சிங்களவனின் கொட்டம் எல்லாம் இதோடு அடங்கிவிடும். எங்கயோ இருந்து கொண்டுவந்த ஆசாமி முகத்தில பிரபகரண்ட முகமூடிய போடு எங்களுக்கு எல்லாம் வித்தை காட்டின சிங்கள சொறியர் கூட்டம் இப்ப வெக்கி தலை குனிகேறது. இந்த படத்தை பார்த்தல் எல்லாம் உங்களுக்கு விளங்கும்.
நன்றி: கலகம்.
இவர் தான் அந்த உடம்புக்குரிய ஆள்
அந்த உடம்புக்கு ஒரு முகமூடி போட்டு பூசாண்டி காடுரங்கள்
ஐயோ ஐயோ .... சிரிக்க சிரிக்க சிரிச்சு கொண்டே இருக்கலாம். ....
நன்றி: கலகம்.
Tuesday, 14 April 2009
தோல்வி..!
தோல்வி ஒரு
சிற்பி !
பல வரலாறுகள் இந்த
சிற்பி செதுக்கியது தான் !
தோல்வி ஒரு
நெருப்பு !
நிறைய தீபங்களை இந்த
நெருப்புதான் ஏற்றியது !
தோல்வி ஒரு
அணை !
ஏராளமான நதிகள் இந்த
அணையிலிருந்து கிளம்பின….
தோல்வி என்பது
முடிவல்ல…
இடைவெளி !
தோல்வி ஒரு
அவஸ்தை அல்ல
அவகாசம் !
தோல்வி என்பது
தண்டணை அல்ல !
எச்சரிக்கை !
சிற்பி !
பல வரலாறுகள் இந்த
சிற்பி செதுக்கியது தான் !
தோல்வி ஒரு
நெருப்பு !
நிறைய தீபங்களை இந்த
நெருப்புதான் ஏற்றியது !
தோல்வி ஒரு
அணை !
ஏராளமான நதிகள் இந்த
அணையிலிருந்து கிளம்பின….
தோல்வி என்பது
முடிவல்ல…
இடைவெளி !
தோல்வி ஒரு
அவஸ்தை அல்ல
அவகாசம் !
தோல்வி என்பது
தண்டணை அல்ல !
எச்சரிக்கை !
Friday, 3 April 2009
இதற்குப் பெயர் தான் காதலா?

நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலா அளவுக்கு மாநிறம். பயங்கர அழகியென்று சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான்.பார்த்ததுமே பச்சக்கென்று ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது.
கண்களில் நீர், என்னவளை கண்டுக் கொண்டதால் வந்த ஆனந்தக் கண்ணீரா? இல்லை கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான்! என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன்.
நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா? முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள்? காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.
கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்த என் காலம் அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது.
அவள் தான் என் காதலி என்று முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை தேடுவது?பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால் பக்கம் செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மஞ்சள் மைனா மாட்டுவாளா என்று என் கண்கள் ஏங்குகிறது.
அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் என்று நினைக்கிறேன். பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடுகிறது.
அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் வருகிறது.முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன்.
இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு, வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி..
அய்யோ கடவுளே!
எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?
உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?
Sunday, 29 March 2009
ஐயோ இசை ஜாம்பவான்களே.. எங்கியாய்ய போய்விட்டிர்கள்..?

ஐயோ இசை ஜாம்பவான்களே.. எங்கியாய்ய போய்விட்டிர்கள்..? அண்மையில் விஜயண்டோனி இசை அமைத்த பாடல் கேட்டநேர்தது ஒருமலை நேரம் பண்பலையை (fm redio) கேட்ட பாடல் என்ன கொடும சார். "ஆதீசுடி" படலை ரீமிக்ஸ் என்ற போர்வையில் நம்ம தமிழரின் மனத்தை கப்பலேற வைத்திருக்கிறார் விஜயண்டோனி இந்தமாதிரி பாடல்களை தடை செய்வேண்டும். இதை கண்டிக்கமாட்டர்களா? நாம் இசை ஜாம்பவான்களே..
Tuesday, 24 March 2009
சிரிக்க...சிந்திக்க..!

"ஈழத்தமிழரின் எட்டப்பன்" எட்டப்பன் ௬ட்டம் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை

இந்த மனித ஜென்மம் கடவுளையும். ஆயுதம் எந்த வைத்துவிட்டான்.

நான் ரெம்ப பிஸி ஆதனால இப்படி ஒரு ஐடியா.! எப்படி என்ன ஐடியா.?

குடிகார பயலுகளா..! எப்படி சொன்னாலும் திருந்தமாட்டிங்க. இதையும் பாருங்க..
திரையில் இடை பார்த்து அலுத்துப்போச்சு. அதுக்காகத்தான் இப்படி ஒரு இடை.
உங்க உலக நாட்டு சண்டைக்கு எங்கள எய்ய இழுகிறிங்க
ஜோ... ஜோ.. இது எங்கயடா வச்சு இருக்க?
fast food தான் கேள்வி பட்டதுண்டு ஆனா fast sleeping.
குரங்குக்கோ மனித குணம்.. மனிதருக்கோ குரங்குகுணம்...
ஐயா.. சாமி..! வந்திங்க பார்த்திங்க எதாவது கிறிக்கிட்டு போங்க சாமி. உங்களுக்கு புன்னியமபோகும்.
நன்றி மீண்டும் வருக.
நன்றி மீண்டும் வருக.
Sunday, 15 March 2009
ஒவ்வொரு தமிழனும். கேட்க்க வேண்டிய பேச்சு..!
ஒரு மொழி ஒரு இனத்தின் அடையாளம். அகவே..! தமிழரிடம் தமிழில் பேசுங்கள்.
முடிந்தால்..! உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
நன்றி மீண்டும் வருக.
முடிந்தால்..! உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
நன்றி மீண்டும் வருக.
Monday, 9 March 2009
அழகிப் போட்டிகள்

அழகு என்பது காண்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றொரு ஆங்கில சொல் உள்ளது. என் கண்களுக்கு அழகாகத் தெரிவது உங்கள் கண்ணுக்கு அப்படி தெரிய வேண்டிய அவசியமில்லை. எனக்கும் உங்களுக்கும் அழகாகத் தெரிவது அடுத்தவருக்கு அப்படி தோன்றுவது நிச்சயம் இல்லை ஒல்லியான உடல்வாக்கு, பருத்த உடல்வாக்கு, சிவந்த நிறம் பழுத்த நிறம் கருப்பு நிறம் உருண்டை முகம் தட்டை முகம் இதுபோன்று அநேக விஷயங்களில் அழகு குறித்து அளவீடுகள் ஆளாளுக்கு அவரவர் பார்வையில் மாறுபடுவது இயற்கை. இந்த நியதியை நிராகரித்து உலகம் முழுசுக்கும் அழகின் இலக்கணம் இவைதான் என்று இறுதி நியாயத்தை வரையருப்பவையே உலக அழகி போட்டிகள். அழகிப் போட்டிகளின் பின்னுள்ள, அரசியல், இவற்றின் சமூக, உளவியல் தாக்கங்கள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன்.
பிரபல பேச்சாளரும், நடிகருமான பெரியார்தாசன், கடந்த 20 ஆண்டுகளாக மனோதத்துவ சிகிச்சையாளராகவும், மனோதத்துவ ஆலோசகராகவும், பதிவு பெட்டு பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது இனி பெரியார்தாசன்...
அழகை ஆராதனை சேர்வது என்ன்ற விஷயம் மனிதகுலத்தில் காலங்காலமாக இருந்து வருவது தான். எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காக உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக பல செயல்கள் நடைபெறுவது தொன்றுதொட்டு நிலவும் வழக்கம் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கவர்வதற்காக தனிப்பட்டு நடைபெற்றுவந்த இம்மாதிரி காரியங்கள் நாளடைவில் மற்றவர்களையும் சந்தோசப்படுத்தும் விதமாக கலைவடிவம் பெற்றது. ஆதிவாசிகளின் நாட்டியம் தெருக்கூத்து, மேடை நாடகம் போன்ற வடிவங்களில் அழகு பரிமாற்றப்பட்டது.
இந்தக் கலை வடிவம் சினிமாவாகப் பரிணாமம் பெற்று பெருவாரியான மக்கள் கூட்டத்தைக் கவரத் தொடங்கிய பின்னர் இந்த "அழகுப் பரிமாற்றம்" என்பது பணக்காரர்களின் விளையாட்டாக மாறியது. அதாவது இதில் வணிகம் புகுந்து கொண்டது.

தெருக்கூத்தில் மகாராஜாவாக வேஷம் போடுபவர் அதிலே தன் திறமையைக் காட்டிவிட்டு பின்னர் துண்டேந்தி ஊர் வசூல் செய்து பிழைப்பு நடத்துவார். தானம் கொடுக்கிற மக்கள் வசதியாக வாழ்ந்தார்கள். சினிமாவில் இது உல்டாவானது! அங்கே ரசிகர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நடிகர் - நடிகைகள் வசதியில் கொழிக்கிறார்கள். ரசிகர்களோ வறுமையில் வாடுகிறார்கள். இந்த சினிமா தந்திரத்தை கவீகரித்க் கொண்ட பெரும் செல்வந்தர்கள் அழகிப் போட்டி என்ற ஐடியாவைக் கொண்டுவந்தார்கள். இந்த அழகிகள் வாயிலாக தங்கள் பொருட்களை விற்பனை செய்வது சுலபம் என்று கண்டு கொண்டார்கள்.
கடந்த 50,60 ஆண்டுகளாக இந்த உலக அழகி, பிரபஞ்ச அழகி கூத்தெல்லாம் நடைபெற்று வந்தாலும் கடந்த சுமார் 15 ஆண்டுகளில்தான் இந்தியப் பெண்களுக்கு இவற்றில் முதலிடமோ அல்லது இரண்டாம் இடமோ, முன்றாம் இடமோ கிடைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது அதாவது உலக மயமாக்கலுக்கு பிறகு ஆசியா கண்டத்தின் மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நாடாகிய இந்தியாவின் வணிகச் சந்தையை குறிவைத்து நடத்தும் நாடகம் இது.
உலக அழகி, பிரபஞ்ச அழகியவும் பட்டம் வென்ற இந்திய பெண்களைவைத்து விளம்பரம் செய்து தமது பொருட்களை இந்தியர்களின் தலையில் கட்டிவிடும் பன்னாட்டு நிறுவனங்களின் வியபர யுக்தி இதன் பின்னணியில் செயல்படுகிறது
சமூகத்தில் பெண்கள் மீதான இதன் தாக்கமும் கவனிப்பும் உரியது. இன்னன அளவுகளில்தான் அழகு என்ற அழகிப்போட்டி கருத்தாக்கத்தை நம்பும் பெண்கள் சிலர். தாங்களும் அதே அளவுகளைப் பெற விரும்பி உடல் இளைக்கும் பொருட்டு குறைவாக சாப்பிட்டும் பட்டினி கிடந்தும் உடல் நலத்தை கெடுத்து கொள்கிறார்கள்.
இதை விட மோசமானது உளவியல் தாக்கம். 32 28 32 என்னமோ அளவு சொல்கிறார்களே.. அந்த அளவி தனக்கு இல்லை என்பதாலும் அழககிப் போட்டிகளில் முன்னிறுத்தப்படும் சிவந்த நிறம் தனக்கு இல்லை என்பதாலும் தாழ்வுமனப்பான்மையில் புளுங்குகிற பெண்கள் எத்தனையோ பே
ர் இருக்கிறார்கள் மனச்சிதைவு நோய்க்கு (schizo phrenia) ஆளாகும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் ஏன் தான் அழகில்லை என்றுநினைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்களையும்நானறிவேன். நம் மக்களுக்கு விழிப்புணர்வு வந்தாலொழிய இதற்கெல்லாம் விடிவில்லை" என்று பொரிந்து தள்ளினர் பெரியார்தாசன். இதுதான் அழகு என இலக்கணம் வகுக்க இவர்கள் யார்? கேக்குறவன் கேனையனா இருந்த ஐமமாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம். என்பது இதுதானோ.!!
நண்பர்களே..! உங்கள் கருத்து எழுதிற்று போங்க
Friday, 6 March 2009
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
நண்பர் அனுப்பிய மின்னஞலில் வந்த செய்தி நீங்களும் படிங்க..!
1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!
2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!
4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!
5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!
6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!
7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.
8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!
9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]
10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!
11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!
12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!
13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!
14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.... எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!
15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!
16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!
17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]
18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!
19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..
20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..
இப்படி இருந்த கண்டிப்பா நீங்க தமிழர்தான்.
வந்திங்க படிச்சிங்க எதாவது எழுதிட்டு போங்க சாமி..!
1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!
2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!
4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!
5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!
6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!
7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.
8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!
9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]
10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!
11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!
12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!
13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!
14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.... எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!
15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!
16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!
17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]
18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!
19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..
20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..
இப்படி இருந்த கண்டிப்பா நீங்க தமிழர்தான்.
வந்திங்க படிச்சிங்க எதாவது எழுதிட்டு போங்க சாமி..!
Thursday, 5 March 2009
பாகிஸ்தானில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை குறிவைத்தது யார்?

போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் பா.மதியழகன்.
சுமார் மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நடைபெறுகின்ற போர், அனைத்துலக சக்திகளின் விளையாட்டு அரங்காக சிறிலங்காவையே மாற்றி விட்டது போன்ற செய்திகள் வெளிவருவது பலருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால், இன்னொரு நாட்டில் சிறிலங்காவை பந்தாகப் பாவிப்பார்கள் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்?
நிச்சயமாக, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ (RAW) வை தவிர பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஓகஸ்ட் 14, 2006 இல் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட் மீது கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலின் இலக்காக தூதுவரே இருந்தாலும் அவர் நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.
இந்தத் தாக்குதலில், சிறிலங்கா அதிரடிப்படையினர் நால்வர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்திருந்தனர்.
வழக்கம் போலவே, புலிகளே தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் என சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியது.
ஆனால், சிறிது காலத்திற்குப் பின்னர் சிறிலங்காவின் ஊடகவியலாளர் குழுவொன்று பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்து.
இந்த பயணத்தின் ஓர் அங்கமாக, சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட்டையும் ஊடகவியலாளர்கள் சந்தித்திருந்தனர்.
இன்னொரு வகையில் கூறப்போனால், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தது.
ஏனெனில், கொழும்பில் பாகிஸ்தானிய தூதுவர் மீதான தாக்குதலின் பின்னணியில் றோவே இருந்தது என்பதற்கான போதிய ஆதாரங்களை ஐ.எஸ்.ஐ திரட்டியிருந்தது.
அதன் அடிப்படையிலேயே, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தன்மீதான தாக்குதலுக்கு றோவே பின்னணியிலில் இருந்தது என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்த பசீர் வலி முகமட், விடுதலைப் புலிக
ளுக்கும் தன் மீதான தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என வெளிப்படையாகத் தெரிவித்து, விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருந்தார்.பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்குமான நெருக்கமான உறவின் உயிர்நாடியாக பசீர் வலி முகமட் விளங்கினார்.
இலங்கையில் பாகிஸ்தான் ஆழமாக காலூன்றுவது தனது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் எனக் கருதிய இந்தியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நடவடிக்கைகளின் ஆணிவேராகத் திகழ்ந்த பசீர் வலி முகமட்டை கொழும்பில் வைத்து தீர்த்துக்கட்ட முனைந்து தோல்வியடைந்தது.
இருப்பினும், தனது புலனாய்வுப் பணியை தொடர்ச்சியாக முனைப்படுத்தியது.
இலங்கையை பொறியாக வைத்து, பாகிஸ்தானை நெருக்கடிக்குள் தள்ளுவதன் ஊடாக பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவில் விரிசலை ஏற்படுத்தி, தனது கொல்லைப்புறத்தில் தனக்கு எதிரான சக்திகள் காலுன்றுவதை நிறுத்த முடியும் என 'றோ' திடமாக நம்புகிறது.
புடவை வியாபரிகள் போல வேடம் தரித்து, மட்டக்களப்பில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் உளவுத் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த றோவின் இரு முகவர்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை 'றோ' சிறிலங்காவில் இறுக்கமாக்கியிருந்தது.
இருந்தபோதும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவுகள் வலுப்பட்டனவே தவிர, வலிமை இழக்கவில்லை. இது றோவுக்கு கடும் எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.
அதேவேளையில், ஐ.எஸ்.ஐயின் பின்னுதவியுடன் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட லஸ்கார் - ஈ - தைபா என்ற தீவிரவாத அமைப்பு மும்பாய் மீது மேற்கொண்ட தாக்குதல் றோவுக்கு தலைகுனிவை மட்டுமல்ல, தடுமாற்றத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

குறிப்பாக, பெருமளவான அமெரிக்க, ஐரோப்பா சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டமை, அனைத்துலக ரீதியில் இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டு பண்ணியிருந்தது.
அதற்கு இராணுவ ரீதியில் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா திட்டமிட்டது. ஆனால், கொண்டலீசா றைசின் தலையீடு அதற்கு இடமளிக்கவில்லை.
ஆனால், தனக்கு ஏற்பட்ட தலைக்குனிவுக்கு எதிராக பழிவாங்குவதற்கு 'றோ' துடியாய் துடித்து தருணம் பார்த்திருந்தது.
இதேவேளை, சிறிலங்காவுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் தானே வழங்குவதனூடாக பாகிஸ்தானின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கலாம் என செயற்பட்ட புதுடில்லிக்கு கடந்த பெப்ரவரி 27 ஆம் நாள் தொடங்கிய வெளிநாட்டு அமைச்சர்களின் 31 ஆவது சார்க் மாநாட்டில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுகள் மென்மேலும் வலுப்படத்தக்க வகையில் இணங்கப்பட்ட உடன்பாடுகள் கடும் விசனத்தையும், சினத்தையும் உண்டு பண்ணியிருந்தது.
அதன் காரணமாகவே, தமிழ்மக்களை கொன்றொழிப்பதற்கு முதுகெலும்பாக இருந்து வந்த காங்கிரஸ் விற்பன்னர்கள் திடீரென தமிழ்மக்கள் மீது அக்கறை உள்ளது போல் வெளிக்காட்ட முற்பட்டார்கள்.
கடந்த ஜனவரி 28 ஆம் நாள் மகிந்த ராஜபக்சவுடனாக சந்திப்பைத் தொடர்ந்து இராணுவ வெற்றிகள் அரசியல் தீர்வுக்கு வழிகோலுவதோடு, வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலை தோன்றுவதற்கு அடிப்படையாகும் என்ற சாரப்பட கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சரியாக ஒரு மாதம் கழிந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி, புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் கருத்து என்பது, சிறிலங்கா தொடர்பான காய்நகர்த்தலில் 'றோ' மீண்டும் ஒருதடவை தோற்றுப் போனது என்ற கருத்தின் மறுவடிவம் எனக் கொள்ளலாம்.
இதுவும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய வகையில், லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது தாக்குதலை நடத்துவதற்கு 'றோ' திட்டமிட்டமைக்கான பிரதான காரணம்.
அத்துடன், தம்புள்ளையில் நடைபெற்ற போட்டிகளின் போது, இந்திய துடுப்பாட்ட அணி; சிங்கள காடையர்களின் கல்லெறிக்கு தொடர்ச்சியாக இருமுறை உட்பட்டது.
இது, தனது நாட்டு அணியினருக்கு சிறிலங்கா உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்ற மனோபாவத்தை புதுடில்லி அதிகார வர்க்கத்தினருக்கு உண்டு பண்ணியிருந்ததாக அறிய முடிகிறது.
அது மட்டுமன்றி, இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததற்கு பதிலாகவே, சிறிலங்கா அணி குறித்த ஆட்டங்களில் பங்குபற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது.
இவையும், றோவின் தரவு சேகரிப்பு கோவைகளில் துணைக்காரணிகளாக அடையாளமிடப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு பெருமளவில் உள்ளது.
இவை அனைத்தையும் தாண்டிய உச்சக் காரணியாக, அனைத்துலக மட்டத்தில் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக வெளிப்படுத்துவதற்கு, உலகளாவிய ரீதியல் அனுதாபத்தை ஈட்டக்கூடிய ஒரு தாக்குதல் அவசியம் என திட்டமிட்ட 'றோ', அதற்கான மிகச்சிறந்த இலக்காக சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தெரிவு செய்தது.
இதன் ஊடாக ஒரே கல்லில் இரு மாங்காயை உடைத்துள்ளது.
அதேவேளை, இந்தப் பழியையும் புலிகள் மீது போடக்கூடிய கைங்கரியங்களில் 'றோ' ஈடுபடத் தொடங்கிவிட்டது.
ஆனால், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பிணைப்பை விரும்பாத எதிரிகளே லாகூர் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
அவதானங்களை கோர்வையாக்குகின்ற வாசகர்களுக்கு லாகூர் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது தெளிவாக புரிந்திருக்கும்.
நன்றி
புதினம்.காம்
விஜய் பற்றிய ஜோக்
நாம் தகவல் தொழில் நுட்பத்தில் மிகுந்த தன்னிறைவு நாம் அடைந்து விட்டோம் இப்போதெல்லாம் போஸ்ட்டுகார்டுகளையோ வாழ்த்து அட்டைகளையோ காண முடிவதில்லை எல்லாவற்றிர்க்கும் செவ் போன் குறுந்தகவல் மெயில் என்று பல பரிணாமங்களை அடைந்து விட்டோம்.
தினமும் என் கைபேசிக்கு எதாவது தகவல்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன நான் ரசித்த தகவல் என்ற லேபிளில் சில வற்றைஉங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன் ரசித்து பாராட்டுவீர் என்ற நம்பிக்கையுடன்.....
இனி ஜோக்.
நிருபர் / மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள் காலையில என்ன செய்விங்க...
நடிகர் விஜய்/ நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்.
நிருபர் / சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள் சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க...
நடிகர் விஜய்/ சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்ல வெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்க முடியலைன்னா பார்த்து கோங்கன்னா....
ஒரு சர்தார்ஜி ரோட்டடுல நடந்து போய்க்குனு இருக்கறப்ப ஒரு காக்கா அவர் தலையில கக்கா போயிடுச்சி சார்தார்ஜி அந்த காக்காகிட்ட ஏன் சனியன்களா நீங்க எல்லாம் ஜட்டி போடவே மாட்டிங்களான்னு கேட்டார்.
அதுக்கு அந்த காக்கா சொல்லிச்சு என்டா கொய்யால .....
நீங்க எல்லாம் ஜட்டியில்தான் ஆய் போவிங்களாடா?ன்னு கேட்டுச்சு....
தினமும் என் கைபேசிக்கு எதாவது தகவல்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன நான் ரசித்த தகவல் என்ற லேபிளில் சில வற்றைஉங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன் ரசித்து பாராட்டுவீர் என்ற நம்பிக்கையுடன்.....
இனி ஜோக்.
நிருபர் / மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள் காலையில என்ன செய்விங்க...
நடிகர் விஜய்/ நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்.
நிருபர் / சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள் சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க...
நடிகர் விஜய்/ சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்ல வெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்க முடியலைன்னா பார்த்து கோங்கன்னா....
ஒரு சர்தார்ஜி ரோட்டடுல நடந்து போய்க்குனு இருக்கறப்ப ஒரு காக்கா அவர் தலையில கக்கா போயிடுச்சி சார்தார்ஜி அந்த காக்காகிட்ட ஏன் சனியன்களா நீங்க எல்லாம் ஜட்டி போடவே மாட்டிங்களான்னு கேட்டார்.
அதுக்கு அந்த காக்கா சொல்லிச்சு என்டா கொய்யால .....
நீங்க எல்லாம் ஜட்டியில்தான் ஆய் போவிங்களாடா?ன்னு கேட்டுச்சு....
Monday, 2 March 2009
வணக்கம் நண்பர்களே..
Subscribe to:
Posts (Atom)
அன்பால் இணைந்தவர்கள்
Powered by Blogger.
இப்ப மணி என்ன..
”காலம்....!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!
தமிழில் எழுதுவதற்கு...
என்னை பற்றி நான் சொல்லனுமா?
- மலர்
- என்னைப்பற்றி.. சொல்வதற்கு ஒன்றும் இல்ல My heart know it's own sorrow. எனது துக்கத்தை எனது இதயம்தான் அறியும். ரூம் போட்டு ஜோசிச்சு பார்த்தேன் "நான் யார்? என்னைப்பற்றி என்ன சொல்ல இதற்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை எனக்குள்ளே என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் தேடல் தொடர்கிறது... பல தேடல்களோடு.. இப் பிரபஞத்தில்.. தன்னைத்தானே புகழ்கிறவன் முட்டாள்.
மலரை பார்க்க வந்தவர்கள்..
பழகலாம் வாங்க.. மலரோடு முக நூலில் இணைய..
கருத்துகளை சொன்னவர்கள்..
தேடுக..
உங்கள் உள்ளத்து உணர்வுகள்..
வாங்க பேசலாமே..
மலரை கைபேசியில் பார்க்க..
மலரின் பதிவுகளை இப்பொழுது உங்கள் கையடக்கத்தொலைபேசிகளிலும் வலம் வரலாம்.http://malar2009.mofuse.mobi. 'or' Opera mini browser மூலம்.



































