Sunday 22 August 2010

வாழ்க்கையில் வறுமையிலே.. வாழ்ந்த கார்ல் மார்க்ஸ்.


          கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் காரணகர்த்த கம்யூனிஸ்ட்களின் பிதாமகர் என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் வறுமையிலே வாழ்ந்தார் வறுமையைத் தவிர வேறு எதையுமே அனுபவிக்கவில்லை என்பது மிகப் பெரும் சோகம். கார்ல் மார்க்ஸ் மனைவி ஜென்னி எழுதிய சுயக் குறிப்பை படித்தால் மார்க்ஸ் என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்தார் என்பது ஓரளவுக்கு புரியும்.
அது: 
                                                                                                                    “மேலும் படிக்க”


       அலைக்கழிக்கப்பட்ட நிலையில் நான் வீடு திரும்பினேன். எங்கள் குட்டி தேவதை.. பிரான்சிஸ்கா சளியால் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தாள். வாழ்வுக்கும் மரணத்துக்கும் நடுவே மூன்று நாள் அவள் போராடி கடைசியில் தோற்றுப் போனாள். தாய்ப் பாலோடு என் நெஞ்சில் வேதனைகளையும் வருத்தத்தையும் சேர்த்துப் பருகியதால்தான் அவள் இறந்து விட்டாள் என்று நினைக்கிறேன்.



     அவள் பிறந்த பொது எங்களிடம் தொட்டில் வாங்கக் கூட பணமில்லை அவள் இறந்த போதும் சவப்பெட்டி வாங்குவதற்கும் கூட.. பார்த்தீர்களா பிரபல்யங்கள் வாழ்த்த வாழ்கையை..!!

2 comments:

  1. நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தோழரே..

    ReplyDelete