Monday 15 February 2010

கிறுக்கியதில் கிழித்துப்போட்டது.!

இது என் எண்ணங்களோடு உரசியது அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி.

பிறப்பு.!
இறப்பின் ஆரம்பம்.

இளமை.!
முதுமையை தொடும் வரை.

அழகு.!
முகச்சுருக்கம் விழும்வரை.

அம்மா.!
இவ்வுலகில் "அன்பு" இருக்கும் வரை.

அப்பா.!
நான் இவ்வுலகில் இருக்கும் வரை.

“மேலும் படிக்க”

நான்.!
என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் வரை.

கேள்வி.!
விடை கிடைக்கும் வரை.

காதல்.!
........... silint இதுவரைக்கும் எதுவும் தெரியல..
தெரிந்தால் இனிவரும் பதிவில் சொல்கிறேன்.

நட்பு.!
............ கற்பை போன்றதாம் so no commentes

நண்பி.!
காதலியாகாமல் இருக்கும் வரை.!

ஈழம்.!
அது தமிழ் தாயின் கனவு (கண்டிப்பாய் என்றோ ஒருநாள் நனவாகும்).

தமிழ்.!
அது என் சுவாசம்.

english (ஆங்கிலம்).!
ficker மாட்டும் வரைக்கும்.

வாள் ஏந்திய சிங்கமும்.!
சிரிக்கிறது தமிழனை பார்த்து.

தமிழர் கைகள்(உறவு) வலுவானால்
சிங்கம் கூட பயந்தோடும்.

பிரபாகரன்.!
அது எங்க குல சாமி.

அன்றைய கியுபாவிற்கு ஒரு சே குவேரா..
இன்றைய தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன்.

தோல்விகள் இல்லாமல்
வெற்றியின் சரித்திரம் எழுதப்படுவதில்லை.

Tuesday 9 February 2010

ஆண் + பெண் = காதல்(ர்)தினம் February 14

"காதல்"என்றால் என்ன?? நம்ம கவிஞர்கள் எல்லாம் காதலை பற்றி சொல்லி எப்படியோ நம்ம காதில பூ..... இதைதான் என் நண்பனிடமும் கேட்டேன். மச்சான் காதலென்றால் என்ன?? அது உயிர் இல்லாதது! உடல் இல்லாதது! அது இரு மனம் சம்மந்தப்பட்டது! ஓஹ அப்படி என்றால் ஏன் அது இளம் பருவத்தினரிடையே வருகிறது..! ஏன் அது உடல் சம்மந்தப்பட்டதா? அல்லது உணர்வு சம்மந்தப்பட்டதா? இதுக்கு நண்பனிடமும் பதில் இல்லை. என்னிடமும் பதில் இல்லை. வாசகர்களே... உங்களுக்கு தெரியுமா? தயவு செய்து தெரிந்தால் சொல்லுங்கள்!

இப்போதுள்ள காலத்தில் கடவுளைக் கூட கண்டுபிடித்துவிடலாம் காதலை கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது.. ஏன் என்றால் இப்போதுள்ள பெண்களிடம்( மன்னிக்கணும் பெண்களை மட்டும் உதரணத்துக்கு எடுத்து கொண்டதற்கு.. ஆண்களும் கூட உண்டு.) "வெயிட்டன பார்ட்டியா"னு பார்த்துத்தான் காதலே வருதாம். சரி விசயத்துக்கு வருவோம்


“மேலும் படிக்க”

காதல் என்றால் அன்பு. (நான் சொல்றது சரிதானே..!) அப்படி என்றால் காதலுக்கு விசேட நாள் தேவை தானா? february-14 "காதலர் தினம்" 'காதலிக்கும் கன்றாவிகளே '..வருடத்தின் 365 நாளும் அவனிடமோ! அவளிடமோ! காதலை(அன்பு) வெளிப்படுத்திரிங்க அப்படி என்றால் எதுக்கு உங்களுக்கு காதலர் தினம்.? ஒரு பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ உண்மையான அன்பாக இருந்தால் 365 நாளும் காதலர் தினமே...

நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கும் நபரா.. அப்படினால் பெண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்.

  • நீங்கள் நல்லவரா? கெட்டவரா? அது முக்கியம் இல்லை. உங்களிடம் விலை உயர்ந்த கை பேசி (Cell phone)IPhone இருத்தல் வேண்டும்.
  • உங்களுக்கு சொந்தமான வாகன (van,car, ect..)வசதி இருத்தல் வேண்டும்.
  • வங்கி கணக்கு Fixed deposit, or current account, or saving accountஇருத்தல் வேண்டும் கண்டிப்பாக ATM card இருத்தல் வேண்டும் போனசாக Cradit card இருத்தல் நல்லது.
  • விதம் விதமாய் her style, dress அலங்காரம் பன்னுபவராக இருத்தல் வேண்டும்.
  • கையில் ஒரு தங்க மோதிரம், கழுத்தில் ஒரு வெள்ளி சங்கிலி இருத்தல் வேண்டும். (கவரிங்காக இருந்தாலும் பிரச்சனை இல்லை பார்ப்பதற்கு தங்கம், வெள்ளியாக ஜோளித்தல் வேண்டும்.)
  • மேலே சொன்ன எதுவுமே இல்லையா கவலைய விடுங்க நீங்கள் எதாவது ஒரு மேலைத்தேய நாடொன்றில் இருந்தாலே போதும் நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அழகு,அறிவு இல்லாடியும் பிரச்சனை இல்லை. (இது மேலைத்தேய கலாச்சாரத்துக்கு ஆசைபடும் பெண்களுக்கு மட்டும்)
  • கஞ்ச்சதனம் இருக்கவே இருக்ககூடாது.


    நீங்கள் ஒரு ஆண் மகனை காதலிக்கும் நபரா அப்படினால் ஆண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்.

  • அதிகம் குண்டாகவும் இல்லாமல் அதிகம் மெலிந்த தேகமும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
  • கண்டிப்பாக உங்களுக்கு "தங்கை" இருத்தல் வேண்டும்
  • Modern girl இருத்தல் வேண்டும் (ஒரு சில ஆண்களுக்கு மட்டும்)
  • அப்பா நல்ல வசதி வாய்ப்புகளோடு இருத்தல் வேண்டும்.
  • மேலே சொன்ன எதுவுமே இல்லையா அப்படியானால் கவலையை விடுங்க அழகும், அறிவும் நிறைந்த குடும்ப விளக்காக இருந்தாலே போதும்.

    குறிப்பு: இது சும்மா டைம் பாஸ்க்கு எழுதியது

Tuesday 2 February 2010

இப்படியும் நடக்குதுங்கோ இங்க..


தி கிரேட் மலேசியா. ஆசியா நாடுளில் வளர்ந்துவரும் நாடுகளில் மிக முக்கியம் வாய்ந்த நாடு. அப்படி இருக்கையில் நாட்டின் முதுகெலும்பே இளைஞர்கள்தான். அதில் எந்தமாற்றமும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது ஒரு சில ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள். சிலர் இப்படியும் நடந்து கொள்கிறார்கள் அண்மையில் இங்கு நடந்த ஒரு உண்மைச்சம்பவம். இதைப் படிக்கும் உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞகளை நினைக்கையில் உங்களுக்கு என்ன தோன்னுது....... நாட்டில் இளைஞர்களை கூலிப்படைகளாக பயன் படுத்தி கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதால் பெண்கள் தனியாக நடந்து செல்லவே பயப்படுகிறார்கள். சில வழிப்பறி சம்பவங்களால் மரணச் சம்பவங்களும் நடந்தது உண்டு.

“மேலும் படிக்க”

பெண்கள் கழுத்தில் சங்கிலியோ, தலிக்கொடியோ அணிந்து கொண்டு நடமாட முடிவதில்லை. நாள் தோறும் எதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கிறது அண்மையில் வேலை முடிந்து வீடு செல்ல விருப்பிய ஒரு குடும்ப பெண். தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை தனது கைப்பையில் பத்திரபடுத்திக் கொண்டு அதற்கு பதிலாக ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொண்டு சென்றார்.

சாலையில் அப் பெண்மணி செல்லும் பொது மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்களில் பின்னல் இருந்த ஒருவன் மஞ்சள் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்றான். சிறிது துராம் சென்ற பிறகு அந்த மஞ்சள் கயிற்றை பார்த்த அவன் மீண்டும் அந்த பெண்மணியிடமே திரும்பி வந்தான். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அப்பெண்ணுக்கு அந்த மஞ்சள் கயிற்றை கட்டி இனிமேல் உனக்கு நான் தாண்டி புருஷன் என்றானாம்.

அந்த மஞ்சள் கயிற்றில் மஞ்சள் துண்டுதான் இருந்தது. பெண்கள் அணியும் மஞ்சள் கயிற்றில் தங்கம் அணிந்திருப்பார்கள். அப்படி எதிர்பார்த்த அந்த வழிப்பறி திருடனுக்கு ஒன்றும் அகபடாததால் ஆத்திரத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிச் சென்றான்.

தனியாக செல்லும் பெண்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். இப்படியும் சில வழிப்பறி திருடர்கள் நடமாடுகிறார்கள்.