Tuesday 8 September 2009

மலேசியாவில் 116௦ இலங்கையர்கள் கைது?


சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்லவிருந்த 116௦ இலங்கைத் தமிழர்கள் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாக அறியப்படுகிறது இவர்கள் அனைவரும் மலேசியாவில் உள்ள 'ஐக்கிய நாடுகள் சபையில் (united nations high commissioner for rafugees) அகதிகளாக பதிவு செய்துள்ளனர். இவ்வளவு தொகையான பேர் கைதுசெய்யப்பட்டது இதுவே முதல் முறையாக அறியப்படுகிறது. 'ஐக்கிய நாடுகள் சபை'(UNHCR) அகதிகள் மேல் கட்டும் அக்கறை இன்மையே இவர்கள் உயிரை பணயம் வைத்து செல்வதாக அறியப்படுகிறது இனி 'ஐக்கிய நாடுகள் சபை' என்ன செய்ய போகிறது... பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.


செய்தி:
மலேசியாவில் இருந்து ஈழத்தமிழன்.